Friday, September 30, 2011

அருள் தரும் அய்யப்பன் - 6

                                    குருகுலம்

கல்வி கற்கும்
காலம் வந்தது;
காவலன் அதற்கேற்ற
காரியம் ஆற்றினான்;

குருகுலம் சென்றான்,
கல்வி கற்றான்,
கல்வி கற்பவன்
கடவுள் அம்சம் என்று
கற்றுத் தருபவன்
கண்டு கொண்டான்;


கற்ற கல்விக்கு தட்சணையாக
கண்ணில்லா பேச முடியா தன் பிள்ளைக்கு
கண் பார்வையும், பேச சக்தியும் அளிக்குமாறு
குரு வேண்ட,
கேட்டதைக் தந்து
அருள் பாலித்து
அரண்மனை வந்தடைந்தான்
ஆண்டவன் வம்சமான
அந்த மணிகண்டன்;


இதற்கிடையில்
இராணிக்கு ஒரு குழந்தை பிறந்தது;

மூத்த பிள்ளை
மணிகண்டனுக்கே
மணி முடி என்று
மன்னன்
முடிவு கட்ட,
மன்னனின் மனைவியின்
மனதை மாற்ற திவான்
முனைந்தான்;



அரசிக்குப் பிறந்த பிள்ளைக்கே
அரியாசனம் என்று
ஆசை காட்டினான்;
ஆரோ எங்கிருந்தோ வந்த
அந்த மணிகண்டன்
அரியாசனம் ஏறினால்
அரசி உன் மகன்
அவன் காலடியில் கிடந்து
அல்லாட நேரிடும் என்று
அச்சுறுத்தினான்;

                                                                        ( அருள் தொடரும் )

No comments:

Post a Comment