ஆண்டாள் கெஞ்சினாள்;
கண்ணா,
கார்மேக வண்ணா,
நானும் என் தோழியரும் 
விடிகாலை வேளை நீராடி எம் 
விரதம் தொடங்க  
விரைந்து வந்தோம்;
விடிந்தது பொழுது;
குளித்து முடித்தோம் நாங்கள்;
ஆடைகளை அபகரித்தாய் நீ;
துக்கித்து நிற்கிறோம் நாங்கள்;
குதூகலித்துக் கிடக்கிறாய் நீ;
குளிரிலே நடுங்குகிறோம் நாங்கள்;
கொடுத்திடு ஆடையை நீ;
இனி யாரும் வரமாட்டோம் 
இக் குளத்திற்கு;
எல்லோரும் கெஞ்சிக் கேட்கிறோம்;
காத்து அருள பணிகிறோம் 
பரந்தாமா;
ஒ கோபாலா
காளியன் 
தலை மேல் நர்த்தனமாடி அவன்
தலைக் கனத்தை
தவிடுபொடியாக்கினாய்;
எங்கள் மேல்
என்ன கோபம் உனக்கு ?
ஏன் வந்தாய் யாரும்
எழாத பொழுது இங்கு ?
எங்களை வதைப்பது
ஏனோ ?
எங்கனம் நீ 
இங்கு நாங்கள் 
இருப்பதை
அறிந்தாய் ?
என்றே கேட்க,
கண்ணன் சொன்னான்.
எல்லாம் நானே 
என்றறிந்த பின்னும் 
ஏனிந்த விரதமெல்லாம் ?
எனக்குத் தெரியாமல்
ஏன் இங்கு வர நினைத்தீர் ?
என்று எதிர்கேள்வி கேட்டான்.
                                                                        ( லீலை தொடரும் )
No comments:
Post a Comment