Friday, September 16, 2011

கந்த புராணம் - 2

                                    மாயா

அந்த காலம்;
அமரர்கள் வலுவோடு வாழ்ந்த காலம்;
அரக்கர்கள்
போரிலெல்லாம்
புறமுதுகு காட்டி
பயந்துப் பதுங்கி வாழ்ந்த காலம்;

அந்த மாதிரி ஒரு போரில்
அரக்கர்கள் மீண்டும் தோற்க
அவர்கள் தலைவன்
ஆகிர்சன் கவலையோடு கவிழ்ந்திருக்க
அவர் பெண் மாயா
ஆறுதல்படுத்தினாள்
அப்பனை,
இமை மூடாதார்களை
இல்லை என்று ஆக்குவேன், அதுவரை நான்
இமை மூடாது
இருப்பேன்,
இவ்வாறு செய்ய முடியாது போனால்
இமை இரண்டும் என்று திறவாது
இறந்து போவேன்; என்றே
இயம்பினாள்;

                                    மாயாவின் மாயை

மாயா தன்னை ஒரு அழகான
மங்கையாக
மாற்றிக்கொண்டாள்;
காசியப்ப முனி
கடுந்தவம் இயற்றும்
காட்டுக்கு வந்தாள்;

தவசி இவரைத்
தான்
திருமணம் செய்து கொண்டு
திறமை பல படைத்த
தனயன் பல பெற்றுத்
தேவர்களைத்
தோற்கடிக்கலாம் என்றே
திட்டமிட்டாள்;



அடர்ந்த
அடவியை
அழகான நந்தவனம்
ஆக்கினாள்;
ஆடினாள் நடனம்;
பாடினால் பாட்டு;
கண் திறந்து
காசியப்பர்;
கண்டார்
மாயாவின்
மாயையான அழகை;
மங்கை
மாற்றிய சுற்றுப்புற சூழலை;
மனம் மகிழ்ந்தார்;
'மங்கை வேண்டுவதென்ன'
முனிவர் வினவினார்;
'மணமுடிக்க வேண்டும்
மாகா முனி தங்களை'
மாயா உரைத்தாள்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment