Thursday, January 28, 2016

மழை



மழை
இதே மழை தான்
இந்த மழையில்தான் ஒருநாள் ...

விடுவிடுவென்று
என்னறைக்கு வந்தவள்
கொதிக்கும் எண்ணெயிலிட்ட அப்பளம் போல்
பொங்க ஆரம்பித்தாள்.
'இப்போ எதுக்கு நீ எனக்கு பணம் கட்டுனே?'
'பின்ன நா கட்டாம யாரு கட்டுவா?'
'நா ஒன்ன கட்ட சொன்னேனா?'
'இன்னிக்கு கடைசி தேதி'
'என்ன பாத்து ஒனக்கென்ன பிச்சக்காரிமாதிரி தெரியுதா?'
'இப்போ என்னங்குறே நீயி'
'பக்கி பக்கி பொறம்போக்கு பன்னாடை'
'...'
'அறிவில்ல'
'...'
'இப்போ எதுக்கு கண்ணடிக்கிறே'
நான் கண்ணடிக்க...
'இந்த முத்தம் தர்றதெல்லா வேணா சொல்லிட்ட'
முத்தம் தர,
'பேசிக்கிட்டே இருக்கே இப்போ எதுக்கு கதவ மூடுறே ?'
....

இதே மழை நாளில் தான்
ஒருநாள்;

Friday, January 15, 2016

அடுத்து என்ன

சல்லிக்கட்ட நடத்த சொல்லி
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
பதான்கோட் பயங்கரம் பத்தி
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
வெள்ள நிவாரணம் ஒழுங்கா கொடுக்கச் சொல்லி
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
ஸ்டிக்கர் ஒட்டுனத எதிர்த்து ஸ்டேடஸ் போட்டு,
வெள்ளத்த பாத்து மிரட்டி (மிரண்டு)
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
சட்டையில்லாத சல்மானே ... ன்னு சில பல கேள்வி கேட்டு
ஸ்டேடஸ் போட்டு,
ஏதோ சொன்ன அமிர்கான
எதிர்த்து ஒரு ஸ்டேடஸ் போட்டு,
நிர்பயா கொலையாளிய வெளிலவிட
நீதி வாங்கிய நிதி எவ்ளோன்னு கேட்டு
ஒரு ஸ்டேடஸ் போட்டு

தாமிரபரணி தண்ணிய திருடும் பெப்சி கம்பெனியையு
அதுக்கு முன்னால நடந்ததெல்லாத்தையும் மறந்து
எப்டியோ நம்ப சமுதாயக் கடமையாற்ற
உதவிய FB க்கு நன்றின்னு
ஒரு ஸ்டேடஸ் போட்டு
அடுத்து என்ன நடக்கும்னு
ஆவலோட காத்திருக்கும் உங்களுள் நானும் ஒருவன்.