Friday, November 24, 2017

அங்கிள் என்று சொல்லிவிட்டாயே



வேலை நாட்களில் வாளித்துணியை
அவசரஅவசரமாய் காயப்போடுகிறாய்.
வார விடுமுறையெனில் வாயில் பிரஸ்ஸோடு
பத்துமணிக்கு பால்கனியில் நிற்கிறாய்
கூந்தலில் டவல் சுற்றி பின் தட்டி துடைத்து வாரி
உதிர்ந்த முடிகளை பால்கனிவெளியே வீசி விடுகிறாய்.
போன் பேசிக்கொண்டே நடக்கிறாய், சிரிக்கிறாய், அவ்வப்பொழுது
இங்கே அங்கே இழுத்து மறைத்து கொல்கிறாய்
அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும்
அரைகுறை ஆடையோடு தரிசனம் தருகிறாய்.
எத்துணை டூயட்டுகள் உன்னோடு பாடியிருக்கிறேன்.
ஒருநாள் டை அடிக்க மறந்துவிட்டேன், அதற்காக ?
அண்ணா என்றழைத்திருந்தாலும் பொறுத்துக்கொண்டிருப்பேன்
அங்கிள் என்று சொல்லிவிட்டாயே, சே ...

Monday, November 20, 2017

பொன்மாலைப் பொழுதில் 6

புடவை கருநீலநிறத்தில், உனக்குப் பிடிக்குமே
ப்ரேஸ்லெட் கையில், நீ பரிசாய்த் தந்தது
உதட்டுச்சாயத்தைத் தவிர்த்து விட்டேன், உனக்காக
பால்கோவா ரெடி, பாயசம் ரெடி
முதல் வருடம் தான் ஏமாற்றிவிட்டாய்
இம்முறை வாக்குதந்தவாறு வந்து விடு
உனக்காகக் காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்,
நீ வருவாய் என



***

உன்னுள் இல்லை அகங்காரம் ஆடம்பரம்
என்னுள் என்றும் உண்டு அபசாரம் ஆத்திரம்
தேவையேயிருந்ததில்லை உனக்கு  அலங்காரம்
தினம் நான் புனைவேன் புதுப்புது அரிதாரம்
நீ அதரம் உதரம் கொண்ட வண்ணச் சித்திரம்
நகரும் காதல் சமுத்திரம்
என் அட்சரம் பிறக்கும் அட்சய பாத்திரம்
வாலில்லையே தவிர நானொரு அவதாரம்
உன் பொருமை அபாரம்
என் அபவாதத்திற்கு இதுவே அபராதம்
ஒருநாள் மறப்போம் நாம் நம் தராதரம்
அதன்பின் பற்றுவேன் உன் வளைகரம்
அதுவரையில் எனைச்சுற்றி எந்நேரமும்
மௌனமான நேரம்

***

மேகம் கருத்து இடியிடித்தது போதும்
மண் குளிரட்டும் இனி
பொழியாய் மழை பொழியாய் !

விதை தூவி நீரூற்றி வளர்த்தது போதும்
காய்க்கட்டும் இனி
மலராய் பூத்து மலராய் !

ஓடி உழைத்துப் பணம் சேர்த்தது போதும்
வாழ்வோம் இனி
வாராய் வாழ்வே வாராய் !

பேசிப் பழகி காதலித்தது போதும்
ஆடை பாரம் இனி
தீண்டாய் மெய் தீண்டாய்

***

மிதிலையின் மைதிலி நீ கம்பனின் நாயகி நீ
கண்ணனின் ராதை நீ ஆண்டாள் கோதை நீ
சகுந்தலை நீ அனுசுயை நீ
தினைப்புனம் காத்தத் திருவள்ளி நீ
அல்லி நீ மல்லி நீ
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

***

அடியே என்ப்ரிய சகி
நேற்று அவரென் வாசல் வந்தாரடி
மறந்தனையோ நீ ?
அன்று கோவிலில் பார்த்தோமே சந்தனத் தோள்களும் சங்கீதம் வாயிலும் ...
வாசல் வந்தவர் வனப்பில் எனைநான் மறந்தது உண்மையடி
பார்வையாலேயே எனைப் புசித்து விடுவது போல் பார்த்தாரடி
கள்ளச் சிரிப்போடு என்னவோ அவர் சொல்ல ஏதும் புரியாது நின்றேனடி
நாணத்தில் என்உடல் தழைய
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே


***

Thursday, November 9, 2017

பொன்மாலைப் பொழுதில் 5

இன்று அதிகாலையிலேயே அவளின் தரிசனம்
ஆண்டவனுக்குத்தான் என் மேல் எவ்வளவு கரிசனம்.
என் இதயங்கவர்ந்தவள் இதமாய்
என்னிடம் பேசினாள்
எனை மிகவும் பிடித்திருப்பதற்கு ஏழெட்டுக் காரணங்கள் கூறினாள்.
இருவரும் இணைந்தே  இத்திருநாளைக் கொண்டாட
என்னவள் முத்தமழை பொழிய
இனி எல்லாப் பொழுதும் அய்யய்யோ ஆனந்தமே

***

காதலுக்கு அடுத்தக் கட்டம்
கண்தெரியும் தூரம் வரை நீயும் நானும் மட்டும்
என்னுள் நீயும் உன்னுள் நானும் தொலைந்து போகும் தருணம்
மனம் மயக்கும் மூலிகை வாசம்
பார்த்திராத புதுக்கோலம்
காண்போமா மண்ணுலகில் சொர்க்கம்
அருகிலேயே இருக்கு மூங்கில் தோட்டம்

***

அவன் நினைவையே நெஞ்சில் சுமந்துத் திரிந்தாள்
அவன் பெயரையே ஜபித்துக்கிடந்தாள்
அனவரதமும் அவனேயருகில் இருப்பதாய் எண்ணி நாட்கள் நகர்த்தினாள்
அவனைத்தவிர வேறாறோடும் பழக மறுத்தாள்
அவள் அன்பிற்குக் கட்டுப்பட்டு இதோ அருகில் அழைக்கிறான்
ராதைக்குப் புரியும் ரகசிய மொழியில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
***

தென்றல் என்னை மெல்லத் தீண்ட
காதலலை நெஞ்சில் கரையேற முயல
சிந்தையில் காமம் நிரம்பி வழிய
தேகம் எங்கும் மோகம் வாட்ட
கண் திறந்திருந்தும் கனவு தெரிய
ஏக்கங்கள் ப்ரார்த்தனையாக
மாலையில் யாரோ மனதோடு பேச

***

மேகம் வாழ்த்த மழை பொழியும் 
மழை வாழ்த்த பூமி செழிக்கும்
பூமி வாழ்த்த வயல் விளையும்
வயல் வாழ்த்த வயிறு நிறையும்
வயிறு வாழ்த்த மனிதம் வாழும்
மனிதம் வாழ்த்த நட்பு சிறக்கும்
நட்புகள் வாழ்த்த எல்லாம் நலமாகும்
நலம் வாழ எந்நாளும் எம்வாழ்த்துக்கள்