Friday, December 29, 2017

பொன்மாலைப் பொழுதில் 9

வட்டநிலா உன் வாசல் வந்து வெளிச்சம் வீசும்
வானவிலுன் உடையிலமர்ந்து வர்ணஜாலம் காட்டும் 
தென்றல் உனை மெல்லத் தழுவி வேர்வை துடைக்கும்  
நட்சத்திரங்கள் உன் கூந்தல் மேல் படர்ந்து அழகூட்டும்
சந்தனம் உன் பொன்னுடல் ஏறி நறுமணம் கூட்டும்
குயில்கள் தம்கூடு விட்டுன் வீடு வந்து இசை மீட்டும்
செவ்வானம் நம் மண்ணில் இறங்கி வந்து மஞ்சள் நீராட்டும்
வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்

***

காதல் ...
கல்லைக் கனியாக்கும் கண்கட்டு வித்தை
மலையை முகிலாக்கும் மாயாஜாலம்
சிலருக்கு மனம் இருக்கும், இடம் மாறும்
சிலருக்கு மனம் இறஇக்துவோகும்,  தடம் மாறும்

காதல் ...
வந்தால் பேச விஷயங்கள் நிறைய இருக்கும்
வந்தவுடன் பேச வார்த்தை வராது தவிக்கும் 
அழகாய்த் தோன்ற ஆசை தோன்றும்
ஆரைப் பார்த்தாலும் அவளா(னா)ய் தெரியும்

காதல் ...
அருகிலிருந்தால் சிறகு முளைக்கும்
தூரச்சென்றால் துயரம் பிறக்கும்
எதையும் மறக்கும் வலுவைத் தரும்
எல்லாம் துறக்க துணிவைத் தரும்

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?


***

அன்பு எங்கும் நிலவுகவே !
பந்தம் பாசம் பொங்கி வழிகவே !
பிள்ளை மனதைப் பெற்றோர் பெருகவே !
மழைபெய்து மண் செழிக்கவே !
சாந்தம் அகிம்சை உலகை ஆள்கவே !
இறைநம்பிக்கையில் இப்பூமி இயங்குகவே !
நல்லோர் நலமாய் வாழ்கவே !
நலிந்தோர் வாழ்வு மேம்படுகவே !
மன்னிப்பு மலிவாய் எங்கும் கிடைக்கவே !
சிரித்துச் சிரித்து உலகம் மகிழ்கவே !
மறப்பதும் மன்னிப்பதும் தாரகமந்திரம் ஆகுகவே !
நல்லொழுக்கம் மக்கள் நெஞ்சில் நிறைகவே !
ஆக்கப்பூர்வச் சிந்தனை அவணிமுழுதும் படர்கவே !
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

***

அரிதாரம் பூசாது அசத்துமுன் அழகு அழகு
ஆணவமில்லாது பழகுமுன் இயல்பு அழகு
கடையில் பேரம் பேசுமுன் சண்டை அழகு
காலையில் வாசம்வீசுமுன் கொண்டை அழகு
இடை மறைக்கும் உன் உடை அழகு
உடை மறைக்கா உன் இடை அழகு
பூவைப்பார்த்துப் பூரிக்குமிப் பூவை அழகு
புதுமைபல செய்யத்துடிக்குமிப் பாவை அழகு
குடையிடையே உடைநனையாதோடும் உன் ஓட்டம் அழகு
குழந்தைகளோடு குழந்தையாகி நீ போடும் ஆட்டம் அழகு
கோபங்கொள்கையில் உன் மௌனம் அழகு
சோகங்கொள்கையில் உன் ஞானம் அழகு
சத்தமின்றிச் சிந்துமுன் சிரிப்பு அழகு
கண்ணீரின்றிக் கரையுமுன் அழுகை அழகு
உண்மை சொல்லனுமென்றால் நீ செய்யும் எல்லாமே அழகு
சுருங்கச்சொன்னால் நீ ரொம்ப *அழகு ... அழகு ... அழகு*

Friday, December 8, 2017

பொன்மாலைப் பொழுதில் 8

கழுத்து வரை பணம்
நெஞ்சில் நிறைய விடம்
எதற்கெடுத்தாலும் சினம்
யாரைப்பார்த்தாலும் உதாசீனம்
எழுத்தில் மட்டுமே நற்குணம்
போதுமிந்த துர்குணம்
அழியட்டும ஆணவம்
மாறட்டும் சுபாவம்
இனி தினம் தியானம்
வேணும் ஞானம்
உணரணும் வாழ்க்கையின் தத்துவம்
புரியணும் பரம்பொருளின் மகத்துவம்
வரம் தரவேண்டும் சிவம்
எங்கே அந்த சிவம் ? 
யார் சிவம் ?
*யார் ... யார் ... சிவம் ?*

---

என்ன வருத்தம் உனக்கு,
ஏது செய்தாய் பிணக்கு;
கருவி நீ, காரியமெல்லாம் அவனது,
அசைவு மட்டும் உன்னது, ஆட்டமெல்லாம் அவனது;
நீ நீயாய் இரு,
வெளியிலிருந்து உன்னைப் பார்த்திரு,
உன்னுடையது ஏதுமில்லை என்பதை உணர்ந்திரு;
நேசிப்பவர் நேசிக்கட்டும்,
வெறுப்பவர் வெறுக்கட்டும்;
படைத்தவனுக்குத் தெரியும் உன் பாதை
வாழ்க்கை செல்லும் வழியில் செல்;
தெரிந்தா வந்தாய் நீ ?
தெரிந்தால் வந்திருப்பாயா நீ ?
கிடைத்தால் ஆடாதே,
கைவிட்டுப் போனால் அழாதே,
*தலைமகனே கலங்காதே, தனிமை கண்டு மயங்காதே*

---

இதுவரை எத்தனையோ ஆணுடன் பேசியதுண்டு.
ஏன் இவனுடன் கூடத்தான்
எத்தனையோ முறை அளவாடியதுண்டு.
கள்ளமில்லாது சிரித்துச்சிரித்துப் பேசி பழகியதுண்டு.
உரிமையோடு சண்டை கூட போட்டதுண்டு.
கூச்சப்படாது காசில்லை என்று சொல்லி இவனிடம் கடன் வாங்கித் தின்றதுண்டு.
என் மற்ற தோழியரோடு சேர்ந்து நக்கல்
பல நாள் செய்ததுண்டு.
எப்படியோ என்னவோ செய்து
என்னைக் கவர்ந்துவிட்டானே ...
சிரிப்பா படிப்பா அழகா ஆற்றலா ...
அன்பா பண்பா ....
ஐயோ ... இன்றிவனைப் பார்க்கும் பொழுதே
என்னுள் ... ஒரு ...ஒரு...

*ஒரு வெட்கம் வருதே வருதே*

---

ஆறு கேட்டேன்
   அருவி தந்தனை
புத்தகம் கேட்டேன்
   நூலகம் தந்தனை
பருகநீர் கேட்டேன்
   பானகம் தந்தனை
மருந்து கேட்டேன்
   உணவு தந்தனை
உறக்கம் கேட்டேன்
   கனவு தந்தனை
*மலர்கள் கேட்டேன்*
   *வனமே தந்தனை*

---

போதுமென்ற மனம் வேண்டும்
பொன் பெண் மாயை விலக வேண்டும்

பேசுவதெல்லாம் உண்மையாக வேண்டும்
பேசாதிருக்க, பொறுமை நிறைய வேண்டும்

சுத்தமான நீர் காற்று வேண்டும்
சூடாய் உண்ண பசி வேண்டும்

கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும்
கிடைத்ததெல்லாம் கொடுத்துப் பழக வேண்டும்

படுத்தவுடன் உறங்க வேண்டும்
உறக்கத்தில் நல்ல கனவே வேண்டும்

அதிகாலை துயிலெல வேண்டும்
ஆத்திரம் அடக்கப் பழக வேண்டும்

புதுயுலகம் பிறக்க வேண்டும்
*புத்தம் புதுபூமி வேண்டும்*

பொன்மாலைப் பொழுதில் 7

இடை அளக்க வருவேனென்று
இமை மூடாது காத்திருக்காயோ !
விரலிணைத்து விளையாட வருவேனென்று
விழி மூடாது காத்திருக்காயோ !
காதல் கவிதைகள் சொல்லியுனை
பரவசப்படுத்துவேனென்று
கனவுகளோடு பலவோடு காத்திருக்காயோ !
கண்களால் அழைத்து, காதினுள் முத்தமிட்டு
கேட்டுத் தொட்டு, கேட்காது முட்டி ..... ம்ம்ம்
ஏதும் மறவாது எனக்காக காத்திருக்காயோ !

நானுந்தானடி காத்திருக்கேன்
நாளை வரும் நாளை எண்ணிக் காத்திருக்கேனடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி

***

அந்த அளவுக்கு இல்லை ஞானம்
இருப்பதைக் கொண்டு எழுத வேணும்
உன்னைப் பற்றி என்பதால் வார்த்தைகள் தானே வந்தமரும்
தினம் ஒரு சிலவரி வசனம்
பிடித்திருந்தால் வரும் விமர்சனம்
எது எப்படியோ எனக்கு நீயே பிரதானம்
என் பாடுபொருளெல்லாம் உன் புராணம்
நெஞ்சிலுண்டு உனக்கோர் உயர்ந்த ஆசனம்
பார்த்து ரசித்ததுண்டு நடையிலே அன்னம்
உன் விழிகள் ஆடும் நர்த்தனம் நாட்டியம்
உன் யவ்வனம் என் கவிதைக்குத் தீவனம் 
உன்னுளுண்டு அநுதினம் ஒரு நறுமணம்
அதன் ரகசியத்தை நீ செப்பனும்
என் அனுமானம் உன் ரண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்

***


கனவு கலையும், பொழுது விடியும்
கைப்பேசி வழி உன் காலை வணக்கம் வரும்
பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்துத் திரியும்
அலுவலகம் வந்தபின் 'இன்றென்ன எழுத?' என்றெண்ணம் உதிக்கும்
எதைச்சொன்னால் நீ ரசித்துச் சிரிப்பாய் என்று யோசிக்கத் தோன்றும்
கண்மூட மேகம் நீர்வீழ்ச்சி மலர்ச்சோலை இவையெல்லாம் வந்து போகும்
மனக்கண்ணுள் உன் முகம் தெரியும்
அவ்வமயம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

***

Friday, November 24, 2017

அங்கிள் என்று சொல்லிவிட்டாயே



வேலை நாட்களில் வாளித்துணியை
அவசரஅவசரமாய் காயப்போடுகிறாய்.
வார விடுமுறையெனில் வாயில் பிரஸ்ஸோடு
பத்துமணிக்கு பால்கனியில் நிற்கிறாய்
கூந்தலில் டவல் சுற்றி பின் தட்டி துடைத்து வாரி
உதிர்ந்த முடிகளை பால்கனிவெளியே வீசி விடுகிறாய்.
போன் பேசிக்கொண்டே நடக்கிறாய், சிரிக்கிறாய், அவ்வப்பொழுது
இங்கே அங்கே இழுத்து மறைத்து கொல்கிறாய்
அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும்
அரைகுறை ஆடையோடு தரிசனம் தருகிறாய்.
எத்துணை டூயட்டுகள் உன்னோடு பாடியிருக்கிறேன்.
ஒருநாள் டை அடிக்க மறந்துவிட்டேன், அதற்காக ?
அண்ணா என்றழைத்திருந்தாலும் பொறுத்துக்கொண்டிருப்பேன்
அங்கிள் என்று சொல்லிவிட்டாயே, சே ...

Monday, November 20, 2017

பொன்மாலைப் பொழுதில் 6

புடவை கருநீலநிறத்தில், உனக்குப் பிடிக்குமே
ப்ரேஸ்லெட் கையில், நீ பரிசாய்த் தந்தது
உதட்டுச்சாயத்தைத் தவிர்த்து விட்டேன், உனக்காக
பால்கோவா ரெடி, பாயசம் ரெடி
முதல் வருடம் தான் ஏமாற்றிவிட்டாய்
இம்முறை வாக்குதந்தவாறு வந்து விடு
உனக்காகக் காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்,
நீ வருவாய் என



***

உன்னுள் இல்லை அகங்காரம் ஆடம்பரம்
என்னுள் என்றும் உண்டு அபசாரம் ஆத்திரம்
தேவையேயிருந்ததில்லை உனக்கு  அலங்காரம்
தினம் நான் புனைவேன் புதுப்புது அரிதாரம்
நீ அதரம் உதரம் கொண்ட வண்ணச் சித்திரம்
நகரும் காதல் சமுத்திரம்
என் அட்சரம் பிறக்கும் அட்சய பாத்திரம்
வாலில்லையே தவிர நானொரு அவதாரம்
உன் பொருமை அபாரம்
என் அபவாதத்திற்கு இதுவே அபராதம்
ஒருநாள் மறப்போம் நாம் நம் தராதரம்
அதன்பின் பற்றுவேன் உன் வளைகரம்
அதுவரையில் எனைச்சுற்றி எந்நேரமும்
மௌனமான நேரம்

***

மேகம் கருத்து இடியிடித்தது போதும்
மண் குளிரட்டும் இனி
பொழியாய் மழை பொழியாய் !

விதை தூவி நீரூற்றி வளர்த்தது போதும்
காய்க்கட்டும் இனி
மலராய் பூத்து மலராய் !

ஓடி உழைத்துப் பணம் சேர்த்தது போதும்
வாழ்வோம் இனி
வாராய் வாழ்வே வாராய் !

பேசிப் பழகி காதலித்தது போதும்
ஆடை பாரம் இனி
தீண்டாய் மெய் தீண்டாய்

***

மிதிலையின் மைதிலி நீ கம்பனின் நாயகி நீ
கண்ணனின் ராதை நீ ஆண்டாள் கோதை நீ
சகுந்தலை நீ அனுசுயை நீ
தினைப்புனம் காத்தத் திருவள்ளி நீ
அல்லி நீ மல்லி நீ
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

***

அடியே என்ப்ரிய சகி
நேற்று அவரென் வாசல் வந்தாரடி
மறந்தனையோ நீ ?
அன்று கோவிலில் பார்த்தோமே சந்தனத் தோள்களும் சங்கீதம் வாயிலும் ...
வாசல் வந்தவர் வனப்பில் எனைநான் மறந்தது உண்மையடி
பார்வையாலேயே எனைப் புசித்து விடுவது போல் பார்த்தாரடி
கள்ளச் சிரிப்போடு என்னவோ அவர் சொல்ல ஏதும் புரியாது நின்றேனடி
நாணத்தில் என்உடல் தழைய
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே


***

Thursday, November 9, 2017

பொன்மாலைப் பொழுதில் 5

இன்று அதிகாலையிலேயே அவளின் தரிசனம்
ஆண்டவனுக்குத்தான் என் மேல் எவ்வளவு கரிசனம்.
என் இதயங்கவர்ந்தவள் இதமாய்
என்னிடம் பேசினாள்
எனை மிகவும் பிடித்திருப்பதற்கு ஏழெட்டுக் காரணங்கள் கூறினாள்.
இருவரும் இணைந்தே  இத்திருநாளைக் கொண்டாட
என்னவள் முத்தமழை பொழிய
இனி எல்லாப் பொழுதும் அய்யய்யோ ஆனந்தமே

***

காதலுக்கு அடுத்தக் கட்டம்
கண்தெரியும் தூரம் வரை நீயும் நானும் மட்டும்
என்னுள் நீயும் உன்னுள் நானும் தொலைந்து போகும் தருணம்
மனம் மயக்கும் மூலிகை வாசம்
பார்த்திராத புதுக்கோலம்
காண்போமா மண்ணுலகில் சொர்க்கம்
அருகிலேயே இருக்கு மூங்கில் தோட்டம்

***

அவன் நினைவையே நெஞ்சில் சுமந்துத் திரிந்தாள்
அவன் பெயரையே ஜபித்துக்கிடந்தாள்
அனவரதமும் அவனேயருகில் இருப்பதாய் எண்ணி நாட்கள் நகர்த்தினாள்
அவனைத்தவிர வேறாறோடும் பழக மறுத்தாள்
அவள் அன்பிற்குக் கட்டுப்பட்டு இதோ அருகில் அழைக்கிறான்
ராதைக்குப் புரியும் ரகசிய மொழியில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
***

தென்றல் என்னை மெல்லத் தீண்ட
காதலலை நெஞ்சில் கரையேற முயல
சிந்தையில் காமம் நிரம்பி வழிய
தேகம் எங்கும் மோகம் வாட்ட
கண் திறந்திருந்தும் கனவு தெரிய
ஏக்கங்கள் ப்ரார்த்தனையாக
மாலையில் யாரோ மனதோடு பேச

***

மேகம் வாழ்த்த மழை பொழியும் 
மழை வாழ்த்த பூமி செழிக்கும்
பூமி வாழ்த்த வயல் விளையும்
வயல் வாழ்த்த வயிறு நிறையும்
வயிறு வாழ்த்த மனிதம் வாழும்
மனிதம் வாழ்த்த நட்பு சிறக்கும்
நட்புகள் வாழ்த்த எல்லாம் நலமாகும்
நலம் வாழ எந்நாளும் எம்வாழ்த்துக்கள்

Wednesday, October 25, 2017

பொன்மாலைப் பொழுதில் 4

அடி அரேபியக் குதிரையே
வீட்டில் நீ அறியாத இடம் சமையலறையே
உனக்குப் பிடித்த இடம் சயனஅறையே
நீ செய்வதெல்லாம் நாள்முழுதும் நித்திரையே
உன் சோம்பலுக்கில்லை வரையறையே
தெரியுமடி,  நானொரு உதவாக்கரையே
ஆமாம், என்றும் இருந்ததில்லை உன் மேல் அக்கரையே
தலையில் நரையும் கண்ணில் திரையும் ...
சரி சரி கத்தி எதற்கிப்போ கண்மணியே
*தலையைக் குனியும் தாமரையே*

***

பலருக்கும் ஏணி
பார்வையில் அக்கினி
பழகினால் திகட்டாக் கனி
என் கவிதைகளின் எழுத்தாணி
உனை எண்ணிக்கிடப்பதே என் பணி
துன்பக் கடலில் நீ துணை வரும் தோணி
உனைத்தொடர முடியாது நிற்கிறேன் நாணி
உன்நலம் வேண்டித் துதிக்கையில் காதினில் 
*காலையில் கேட்டது கோவில் மணி*

***

மண்ணை முதலில் முத்தமிட்ட மழைத்துளி இது
என்று சொல்ல முடிவதில்லையே.

காதல் நெஞ்சுள் நுழைந்தது எக்கணமென்று
எடுத்துரைக்க ஏலவில்லையே.

கரையை முதலில் தொட்ட அலையிதுவென
கண்டு சொல்ல ஆளில்லையே.

*பூக்கள் பூக்கும் தருணம் - ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே*




***

உன் மொழி முறைப்பும் சிரிப்பும்
என் மொழி பொய்யும் புரட்டும்
சரி சரி
நிலவின் மொழி வளர்வதா தேய்வதா ?
கனவின் மொழி ஆசையா ஏக்கமா ?
காதலின் மொழி அன்பா அக்கறையா ?
ஊடலின் மொழி தண்டிப்பா மன்னிப்பா ?
கல்வியின் மொழி அடக்கமா அமைதியா ?
*காற்றின் மொழி ?*

***

பொன்மாலைப் பொழுதில் 3

இன்று அதிகாலையிலேயே அவளின் தரிசனம்
ஆண்டவனுக்குத்தான் என் மேல் எவ்வளவு கரிசனம்.
என் இதயங்கவர்ந்தவள் இதமாய்
என்னிடம் பேசினாள்
எனை மிகவும் பிடித்திருப்பதற்கு ஏழெட்டுக் காரணங்கள் கூறினாள்.
இருவரும் இணைந்தே  இத்திருநாளைக் கொண்டாட
என்னவள் முத்தமழை பொழிய
இனி எல்லாப் பொழுதும் *அய்யய்யோ ஆனந்தமே*

***

காதலுக்கு அடுத்தக் கட்டம்
கண்தெரியும் தூரம் வரை நீயும் நானும் மட்டும்
என்னுள் நீயும் உன்னுள் நானும் தொலைந்து போகும் தருணம்
மனம் மயக்கும் மூலிகை வாசம்
பார்த்திராத புதுக்கோலம்
காண்போமா மண்ணுலகில் சொர்க்கம்
அருகிலேயே இருக்கு *மூங்கில் தோட்டம்*

***

அவன் நினைவையே நெஞ்சில் சுமந்துத் திரிந்தாள்
அவன் பெயரையே ஜபித்துக்கிடந்தாள்
அனவரதமும் அவனேயருகில் இருப்பதாய் எண்ணி நாட்கள் நகர்த்தினாள்
அவனைத்தவிர வேறாறோடும் பழக மறுத்தாள்
அவள் அன்பிற்குக் கட்டுப்பட்டு இதோ அருகில் அழைக்கிறான்
ராதைக்குப் புரியும் ரகசிய மொழியில்
*சின்னக் கண்ணன் அழைக்கிறான்*

***

தென்றல் என்னை மெல்லத் தீண்ட
காதலலை நெஞ்சில் கரையேற முயல
சிந்தையில் காமம் நிரம்பி வழிய
தேகம் எங்கும் மோகம் வாட்ட
கண் திறந்திருந்தும் கனவு தெரிய
ஏக்கங்கள் ப்ரார்த்தனையாக
*மாலையில் யாரோ மனதோடு பேச*

***

மேகம் வாழ்த்த மழை பொழியும் 
மழை வாழ்த்த பூமி செழிக்கும்
பூமி வாழ்த்த வயல் விளையும்
வயல் வாழ்த்த வயிறு நிறையும்
வயிறு வாழ்த்த மனிதம் வாழும்
மனிதம் வாழ்த்த நட்பு சிறக்கும்
நட்புகள் வாழ்த்த எல்லாம் நலமாகும்
*நலம் வாழ எந்நாளும் எம்வாழ்த்துக்கள்*

***




Thursday, October 19, 2017

Pandharpur

Date: 17-Oct & 18-Oct-2017

During Diwali 2017, we (my brother & myself) planned for a trip to Pandharpur, a holy place for hindus, where Rukmini Krishna's abode exist. Krishna worshipped as Panduranga, Vittala in this place, in Maharashtra. Pandharpur is just a 5 hours journey, 220 kms from Pune where I live currently.

Started on 9.40am on 17-Oct and reached Pandharpur just around 2.30 in the afternoon. Though it rains on daily basis, heavy hot weather prevails on the way as well at Pandharpur, people busy with diwali shopping everywhere.



I made accommodation booking at ISKCON Pandharpur, contact #: 02186 267242, East bank of Chandra Bhaga River. Poor maintenance and there are few more drawbacks, though manageable for a day stay. ISKCON provides food (prasad) at definite timings at a nominal rate. Please take a note that ISKCON is little far from Rukmini Panduranga temple as well there are no other shops around.






Around temple, there are handful of horse carts, just to show the city is still maintaining the old tradition.


 

We already made online booking for our darshan between  5pm & 6pm on 17th Oct. Reached temple and took necessary stamping from the nearby Office to enter into the online darshan queue. It seems even the general darshan queue too is not crowded though usually it will. People must be busy with diwali preparations, lets hope.




The one just opposite in the foto below is the Rukmini Panduranga temple.





Just an hour inside temple and we got a very good darshan. You can enter the main sanctum, touch Panduranga Vittala's feet; That day Vittala was dressed in a dark blue full hand shirt, with jewels all over. You may also get blessings of Rukmini, Satyababa, Radha Rani inside the temple.

Our family deity Khandoba on the way in the main road.




The next day we started our journey towards Kaikadi Mahraj Ashram where you have a lot & lot of hindu sculptures for darshan. 








We clicked a very few pictures since photography is not allowed inside.

After an hour around the Ashram, we started our journey back to Pune and reached at 2.30pm on 18th. The Diwali of 2017 ended up with a very good get-together family time for us.




Friday, October 13, 2017

பொன்மாலைப் பொழுதில் - 2

கோவில்ச் சிலையழகும்
திருவாரூர்த் தேரழகும்
தோகை விரித்தாடும் மயிலழகும்
ராஜா ரவிவர்மாவின் உயிரோவிய அழகும்
இத்தனையும் இணைந்தும்
ஈடாகா,
வஞ்சியுந்தன் பேரழகை
*என்னவென்று சொல்வதம்மா*
---
நாய் கூட நாடாத உன்னை
நாடே நோட்டமிடுவதாய் நம்புவாய்
நீயே, நீயாகவும் அவளாகவும் மாறி மாறிப் பேசிக் கொள்(ல்)வாய்
அவளருகில் இல்லாப்பொழுது
சகாரா பாலைவனத்தில்
சாகக்கிடப்பதாய் உணர்வாய்
கூட இருந்தாலோ
கூவம் நதிக்கரையும்
தேன் பாயும் தேம்ஸ் நதியாய்த் தோன்றும்.
எல்லாம்
*காதல் ... மயக்கம்*
---
விடிந்ததும் விலகி, மீண்டும் வருகிறது இரவு
உண்டதும் மறைந்து, மீண்டும் எடுக்கிறது பசி
வெட்டியதும் உடைந்து, மீண்டும் வளர்கிறது நகம்.
நான் கண்டது கனவா? இருக்கட்டும்
நாளையும் நீ ... கனவிலாவது
*மீண்டும் மீண்டும் வா*
---

என்ன வேலையினிடையில்  இருந்தாலும்
எத்தனை குழப்பங்கள் என்கூட இருந்தாலும்
கண்மூடிக் கொஞ்சமுனை நினைத்தாலோ
நெஞ்சில்
*ஆனந்த யாழை மீட்டுகிறாய்*
---
பிரிந்துதான் போனோன்
மறந்தா போனேன் ?
விலகித்தான் இருக்கிறேன்
வெறுப்புடனா இருக்கிறேன் ?

சரி சரி
*மறுவார்த்தை பேசாதே*
---
நிறைய உழைத்துக் களைத்திருப்பாய்
மனதில் பாரம் சுமந்து ஓய்ந்திருப்பாய்
மடியில் தலை சாய்த்து உறங்கிடு
*ஆரிரோ ஆரிரோ
சொல்லவோ பாய்போட்டு*
---
பார்த்துப் பேசி பழகியதும்
சிரித்து ரசித்து உருகியதும்
ஆடிப் பாடி திரிந்ததும்
இன்று நினைத்து பார்த்தாலும் ...
*லேசாப் பறக்குது மனசு*
---
என்ன வேண்டுமென்றேன்
ஏது உன் ஆசையென்றேன்
ஏதாவது இன்றாவது சொல்லென்றேன்
ஏந்திழையாள் வாய் திறந்தாள்
*ஒன்றா இரண்டா ஆசைகள்*
---
கண்ணடுத்தாய்
கிச்சுகிச்சுமூட்டினாய்
தோளில் தலை சாய்த்தாய்
போகனுமென்கிறாயே
*இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதா என்ன?*
---
இடியாய் இடித்து மேகம் பேச
மெல்லக் கூவி குயில் பேச
பூவே, பூவைப்போன்ற பூவையே,
*மலரே, மௌனமா ?*
---
கண்படு தூரத்தில் இல்லை
பேசவும் வாய்ப்பில்லை
 கவலையில்லை
 என்னுள்ளே தானே நீ,
*கனவாய்! காற்றாய்!*
---

பொன்மாலைப் பொழுதில் - 1

இன்று இத்தினம் என்னோடு உன் புறப்பாடு
நெஞ்சில் எதற்கு அய்யப்பாடு
எழுந்து வா துணிவோடு
மரங்கள் சூழ்ந்து பூக்கள் நிறைந்த ஒரு காடு
இடையில் நமக்கென்றோர் வீடு
நாமிருவர் மட்டும் தங்க ஏற்பாடு
குயிலோசைக்கேற்றார் போல் நீ பரதம் ஆடு
கூடவே *மனசு மயங்கும் மௌனகீதம் பாடு*
---
இது பின் மாலை நேரம்
அந்தி மெல்ல ஆடி வரும் நேரம்
கண்களால் பேசமுடியாத நேரம்
விரல்கள் விளையாடத் துவங்கும் நேரம்
முல்லை மலரும் நேரம்
ஆதவன் மாயும் நேரம் 
*நிலாக் காயும் நேரம்*
---

நெஞ்சின் இறுக்கம்
உனைக் கண்டால் இறங்கும்
உன் பார்வையில் தெய்வீகம்
என் நெஞ்சில் அதன் அனுக்கிரகம் 
அனவரதமும் உன் ஞாபகம்
சித்தம் சாந்தம்
நெஞ்சிலோர் நிசப்தம்
மெல்ல ஒலிக்கும் சப்தம்
கேட்டால் மனதுள் உன்மத்தம்
நீ இசைக்கும் கீதம், காதல் வேதம்
*நீயொரு காதல் சங்கீதம்*
---
இருமினால் இங்குப் பார் என்று பொருள்
முறைத்தால் பேச்சை நிறுத்து என்று பொருள்
உள்ளங்கையைச் சொரிந்தால் பசிக்கிறது
என்று பொருள்
கால் விரலால் கால் விரலைத் தடவினால் ..... என்று பொருள்
இதைப்பற்றி நீ ஏதும் இதுவரை சொன்னதில்லையே
*ரகசியமாய் ரகசியமாய்ப் புன்னகைத்தால் பொருளென்னவோ ?*
---
தத்தை இவள் அழகைத்
தலைசாய்த்துப் பார்த்து ரசிக்கும் மயில்

பூவை இவள் மேனிவாசங்கண்டு
மெய்சிலிர்த்துப் போகும் பூக்கள் 

நங்கை இவள் நாட்டிய நடையழகை
நாணிக் கண்டு ரசிக்கும் அன்னம்
வஞ்சி இவள் கொஞ்சுபார்வை காண, நீயும்
வானம் விட்டு வாராயோ
*வண்ணம் கொண்ட வெண்ணிலவே*
---
மழையைத் தூதனுப்பி
மண்ணின் நலம் அறிந்துகொள்கிறது மேகம்
வேரைத்  தூதனுப்பி
நீரின் நலம் அறிந்துகொள்கிறது மரம்
துயரத்தைத் தூதனுப்பி
இறைநம்பிக்கையை நலம் விசாரிப்பான் இறைவன்.
இந்தப் பாடலை நான்  உனக்கனுப்பி ...
*நலம், நலமறிய ஆவல்*
---
சிரிக்கிறாய் சில நேரம்
சீறுகிறாய் சில நேரம்
அணைத்துக் கொள்கிறாய் சில நேரம்
ஆத்திரத்தில் விலகி நிற்கிறாய்
சில நேரம்
பனியாய் .... புயலாய்
நிலவாய் .... நெருப்பாய்
இன்னும்....இன்னும்
*மழையும் நீயே, வெயிலும் நீயே*

---

Monday, October 2, 2017

பிடிச்சிருக்கு

நெற்றி ஓரத்தில் வந்து விழும்
அந்த சில முடிக்கற்றை - பிடிச்சிருக்கு

கெட்ட வார்த்தை சொல்லிவிட்டாயோ?
நாக்கைக் கடித்துக் கொள்கிறாயே - பிடிச்சிருக்கு

கொட்டாவி விட்டபடி
வாயின் வாசலில் சொடுக்குகிறாயே - பிடிச்சிருக்கு

எதுவும் மறையவில்லையென்றாலும்
எல்லாப் பக்கமும் இழுத்துவிட்டுக் கொள்கிறாயே - பிடிச்சிருக்கு

மொத்தத்தில்
எல்லாமே பிடிச்சிருக்கு
நீ என் மனைவியாயில்லாததால்.

Monday, September 4, 2017

மழை

மழை 
இந்த மழை தான் 
இதே மழை தான் 
இந்த மழை நாளில் தான் ஒருநாள் 

கோபமாய் வந்தாள் 
அமரச்சொன்னேன், 'பேசாதே' என்றாள்
கைக்குட்டை தந்தேன், 'தொடாதே' என்றாள் 
'கோபமா ?' என்றேன், 'நிறைய' என்றாள் 

தேநீர் தந்தேன் மெல்ல அருந்தினாள்
வெல்லப்பார்வை என்மேல் வீசினாள். 

மின்சாரம் நின்றது, இருள் சூழ்ந்தது 
மின்னல் வெட்டியது, தயாராய் இருந்தேன் 
இடியிடிக்க அய்யோ என்றவள் அலர 
அருகிலிருந்து பிடித்துக்கொண்டேன்.
 
அந்நேரம் பார்த்து
'பனியோ ? பனியின் துளியோ? 
உன் இதழ் மேல் என்ன ?'  
'பனியோ? தேனோ ? நீ சுவைத்தால் என்ன?'
என்று பாடல் ஒலிக்க ... 
 
...
... 
 
இதே மழை தான் 
இந்த மழையில் தான் ஒருநாள்.

Sunday, August 20, 2017

எப்பொழுதும்போல் சிரித்து வைத்தேன்

சனிக்கிழமை காலை

தேவையில்லாதவற்றையெல்லாம் 

தேடி எடுத்து வண்டியில் நிரப்பிக்கொண்டேன்.

முதல் நிறுத்தம் பழைய பேப்பர் கடை
போட்டதுக்குக் கிடைத்தது இருபது ரூபாய்

வாங்கிக் கொண்டு
தொடர்ந்து செல்ல டைலர் கடை
தைக்கக் கொடுத்து
தைத்ததை வாங்கிக் கொண்டு

அடுத்து நின்றது கோதுமை வாங்க
அங்கேயே தள்ளுவண்டியில் வாழைப்பழம்

தொடர்ந்து சென்று குக்கர் ரிப்பேர்
கொஞ்ச தூரத்தில் காய்கறி கடை

அதற்கடுத்து யூ டர்ன்
மாவு மில்லில், வாங்கிய கோதுமையை மாவாக்கி என்னாச்சி போன வாரம் ரிப்பேருக்குக் கொடுத்த மிக்சி 
என்று கடைகாரருக்கு நினைவுபடுத்தி

எனக்குப் பிடிக்குமேயென்று சூடாய் வடை வாங்கிக்கொண்டு

வீட்டிற்கு வந்து 'இன்று நூறு ரூபாய் மிச்சம்' 

என்று சொல்லும் மனைவியிடம்

இருநூறு ரூபாய் பெட்ரோல் செலவு 

என்று சொல்ல முடியாது,

கவிதைக்குக் கரு கிடைத்த மகிழ்ச்சியில் 

சிரித்து வைத்தேன், எப்பொழுதும்போல்.

Tuesday, August 1, 2017

வாழ்க்கையில் அர்த்தம்

காய்கறிக் கடையில்  கூட்டம்
பல் மருத்துவ மனையில் பலபேர்
முடி வெட்டும் கடையிலும் மூன்று நான்கு பேர்
இரண்டு மூன்று நான்கு சக்கர வாகனங்கள் பறக்கின்றன
பலமாய்ப் பேசி சிரித்தபடி
பள்ளி மாணாக்கர் பத்து பேர் 

என்னதான் சொல்ல வருகிறான் பார்ப்போம்
என்று நீங்களும் தொடர்ந்து படிக்கிறீர்கள்
எல்லாவற்றிலும் ஏதாவது அர்த்தம் பொருள் இருக்க வேண்டும்
என்பது அவசியமா என்ன, 

உங்கள் வாழ்க்கையில் ?

Wednesday, July 26, 2017

வயசாகிடுச்சே



அவள்,
அழகாய் இருப்பாள் என்று தனியாய்ச் சொல்லவேண்டுமா என்ன ?
அலுவலகத்தில், என் இருக்கைக்குக் கொஞ்சம் தள்ளி;

இன்று நீல நிறம், வேறு உடை,
ஆனால்
பக்கத்து இருக்கைப் பையனுடன்
அதே சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
நேற்று ஒருமாதிரி  பச்சை நிறத்தில் ஒரு ஆடை,
பக்கத்து இருக்கைப் பையனுடன்
சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
போன வாரமும் இதே கதைதான்.

நாளை அலுவலகத்துக்கு
என்ன நிற உடையில் வருவாள் என்று தெரியாது,
ஆனால் வந்தபின் என்ன செய்வாள் என்பது -
இப்பொழுது உங்களுக்குக் கூட தெரிந்திருக்கும் தானே.

என்னது ? நான் ஏன் அவளை நோட்டம்விடுகிறேனா ?
நீங்க மட்டும் உத்தமரா என்ன ?
வேறு பெண், வேறு நிறம், வடிவம்,
ஆனால் உற்றுநோக்குவது
 ஆண்களின் அடிப்படை உரிமை என்பது
தங்களுக்குத் தெரியாதா என்ன ?

பெறுவார் இல்லையேல் ஈவார்க்கு ஏது பெருமை ?

சரி சரி
நமக்குள் சண்டை வேண்டாம்,

என் சந்தேகமெல்லாம்,
இவர்கள் அப்படி என்னதான் பேசுவார்கள் என்பதைப் பற்றியில்லை,
வார விடுமுறை நாட்களில்
இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான்
என் கவலையெல்லாம்.

வயசாகிடுச்சே கலியபெருமாளே !