Thursday, April 8, 2021

என்ன சொல்ல?

என்ன சொல்ல?
ஏற்கெனவே யார் யாரோ என்னென்னவோ சொல்லியிருக்கிறார்களே, நானெனன்ன சொல்ல?
சொன்னதை ஏன் சொல்லனும்?
இதுவரை யாரும் சொல்லாததை நானெப்படி சொல்ல முடியும்?
அப்படிச் சொல்லத்தான் நான் யார்?
சொல்லாது புரியாதா?
சொல்லாது புரியாதது சொல்லி எப்படி புரியும்?
சரி, சொல்லலை, புரியுதுல்ல.


சும்மாயிருக்கேன்

சும்மாயிருக்கேன்
ஏதும் எண்ணாது சும்மாயிருக்கேன்
எதையும் எண்ணக்கூடாது என்று எண்ணியவாறு சும்மாயிருக்கேன்
எதிரில் தெரிவது மரம் மாடு மனிதம் எல்லாம் ஒன்று என்று புரிந்தபடியால் சும்மாயிருக்கேன்
நீயும் நானும் சமம் என்று உணர்ந்தபடி சும்மாயிருக்கேன்
சும்மாயிருப்பதில் சுகமுண்டு
நீ என்ற நானும் சும்மாயிரு என்று சொல்ல எண்ணாது, நான் என்ற உன்னோடு சும்மாயிருக்கேன்
'முத்திடுச்சி' என்று முத்திரை குத்தலாம்
ஞானத்தின் பக்கம் என்றும் எண்ணலாம்
எது எப்படியோ நாமாகிய  நான் சும்மாயிருக்கேன்