Wednesday, September 17, 2014

உன்நினைவு

கருமேகத்தைக் காணும் போதெல்லாம்,
மழையில் நனையும் போதெல்லாம்,
பூத்து சிரிக்கும் பூவைக் காணும் போதெல்லாம்,
கரையை முட்ட ஓடிவரும் அலையைக் காணும் போதெல்லாம்,
இனிமையான காதல் பாட்டு கேட்டு ரசிக்கும் போதெல்லாம்
மறவாத உன்நினைவு
மறுபடி மறுபடி ஞாபகத்தில் வருவதை
மறுக்கமுடியாது நான் மகிழ்கிறேன்;

Monday, September 15, 2014

கண்ணே நீ வந்துவிடு

காலையில் கண் விழிக்குமுன்னே,
சூரியக் கதிர்கள் எனைச் சுடுமுன்னே,
குயில் வந்து கூவி என்னுறக்கம் களைக்குமுன்னே,
கண்ணே நீயென் கனவிலாவது வந்துவிடு;

காதலன் நானுனைக் கட்டிப்பிடித்து
காதலிக்க இடம்கொடு;

முத்தமிட்டு முத்தம் பெற்று எனை
மோகத்தீயில் ஆழ்த்திவிடு;

கடமைகள் எனை உருட்டி மிரட்டி அடக்கும் முன்
உனை ஆள விட்டுக்கொடு;