Thursday, August 22, 2019

compost powder making


If when we have plants in our garden, we need compost, a perfect nutrient rich food for them to grow. Either you may buy compost from nursery around you or you may prepare your own compost from kitchen waste so that you directly help save the environment by not polluting.

Here I follow Stonesoup's TE composter process in order to prepare my compost, from kitchen waste.

As a starting point, lets see how to get the compost maker powder which is an essential mix for the process. This mix particularly is used to absorb the moist and excess water in the kitchen waste that we throw into the compost bin.

Lets go through the steps on how to get this compost mixer.

1. You need a bucket to prepare the mix. I use a plastic one, 10L capacity, 60cms height, 40cms diameter (approximately)

2. When you buy TE composter, you'll automatically receive this compost maker brick. You can get it separately too. I bought this from stonesoup web site.


3. Remove the brown cover and place the brick inside the bucket (horizontally). FYI - I cut the brown paper into small pieces and throw into the composter bin.


4. Add 1L water as per suggestion but I added around one-and-half litres of water. This is the initial stage (below) around 8am.


5. Intermediate update around 10.30am where the brick absorbs the water as well grow in size.


6. After 4 hours this is the status of the cocopeat brick.


7. You just need to crush this soaked brick that automatically breaks into powder. Just a gentle crush is very much enough, no force is essential. 




8. You also need a air tight container in order to store the compost maker powder. I used this one, 50 cms height, 30cms diameter approximately.


9. Transfer the powder from the bucket to this air tight container.


Every time you pour kitchen waste into the composter bin, you need to topup a layer of this powder too.

Thank you: Stonesoup (www.stonesoup.in)



Thursday, August 15, 2019

பொன்மாலைப் பொழுதில் 60

454. யோசித்துப் பார்க்கிறேன், என் எல்லாவற்றிலும் இருக்கிறாய் நீ.
என் பசியாய் நீ
பசிக்குப் புசிக்கும் பதார்த்தமாய் நீ
மயக்கம் நீ
மயக்கம் தெளிக்கும் மருந்து நீ.
மறைந்து நின்று என் நொடிகளை மணிகளாக்குகிறாய் நீ.
அருகில் இருந்தபடி நாட்களைக் கூட நொடிகளாக்குகிறாய் நீ.
நான் பார்த்து ரசிக்கும் ஓவியம் நீ
படித்து மகிழும் காவியம் நீ
என் கவிதை கற்பனைகளில் கலந்திருக்கிறாய் நீ
இக் கண்ணனின் ராதை நீ
ஆண்டாள் கோதை நீ
மேகம் நீ, வானம் நீ,
வேதம் நீ, ஞானம் நீ
*ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ*

453. அமெரிக்கா ஆஸ்திரேலியால்லாம் அந்தக் காலம்.
ஆப்ரிக்க காடுகளுக்கும் அமேசான் நதிக்கும் செல்ல விரும்புன்றனர் இன்று.
3 அறை பெரிய வீடு கேட்டதெலாம் மாறி
கடலலைகளைப் பார்த்தபடி தனி பங்களா வேண்டுமாம் இன்று.
பப் டிஸ்கோத் பார்ட்டி எல்லாம் தினத் தேவையாய் மாறிப் போனது
உனக்குத் தெரியாமலிருக்கலாம்.
சமையல் செய் என்றும், பூ சூட, புடவை கட்டல்லாம் வற்புறுத்தக் கூடாதென்று .... ம்ம்ம்
நான் இப்படியெல்லாம் உன்னைப் படுத்தவில்லை,
எனக்கும் இதெல்லாம் பிடிப்பதில்லை.
எந்த நிபந்தனையும் இல்லை, உன் நிழலாய் வரத் தயாராயிருக்கிறேன்
*கண்ணைக் காட்டு போதும்*


452. ராமன் என்றதும் லக்ஷ்மணன் அனுமன் ஞாபகம் வரும்.
மார்கழியில் விடிகாலை விழித்து திருப்பாவை படிக்க ஆசை வரும்.
கைப்புள்ளே, நாய் சேகர், போன்ற பேரைக் கேட்டாலே சிரிப்பு வரும்.
செய்யும் சமையலில் சுகந்தமிருக்க வயிறில் பசி தானே வரும்.
சொந்த மண்ணில் காலடி வைக்க நெஞ்சில் ஒரு சந்தோஷம் வரும்
ப்ரபாவை 'எந்த ஸ்கூல்' எனக் கேட்டு ராகிங் செய்ய ஆசை வரும்.
முருக வடிவு ... அருவா சொருவிய சொர்ணாக்கா ஞாபகம் வரும்.
நெய் சாம்பாரில் மிதக்கும் இட்லி பார்த்ததும் அமுதன் ஞாபகம் வரும்.
எகோலாக் பெட்டி திறக்க ராம்க்கு ஜானுவின் ஞாபகம் வரும்.
எந்நேரமெனினும், அன்பே ... உனை எண்ண, மனதுள்
*தம்தன தம்தன தாளம் வரும்*


451. நல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.
என்னை எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்.
கெட்டப் பய சார் இந்த காளி. பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்லே.
இதெப்படி இருக்கு, சீவிடுவேன்.
கஷ்டப்படாம கெடைக்காது. கஷ்டப்படாம கெடைக்கிறது எதுவும் நெலைக்காது.
வாய்ப்புகள் அமையாது நாம தான் அமைச்சுக்கணும்
என் வழி தனி வழி
நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.
சிங்கம் சிங்குளாத்தா வரும்
ஆண்டவன் நம்ப பக்கம் இருக்கான்
ஆண்டவன் சொல்றா, அருணாச்சலம் முடிக்கறா.
நா ஒரு தடவே சொன்னா நூ...று தடவே சொன்ன மாதிரி.
யோசிக்காம பேசமாட்டே, பேசிட்டு யோசிக்க மாட்டேன்
கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சி போச்சி
கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்.
*ராக்கம்மா ... கையத் தட்டு*


450. ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்தலே வாழ்க்கை.
நீ செல்லும் வழியில் தொடர்ந்தால் அது உன் மேல் உள்ள நம்பிக்கை.
காக்க நீ இருக்க கவலை எதற்கு என்ற தைரியம்.
இதில் ஒருவகை தான் சரணாகதி, அடைக்கலம் எனப்படும்.
விபீஷன் ராமனை சரணடைந்தான்
தன்னால் முடியாததும்  திரௌபதி கண்ணனிடம் சரணடைந்தாள்.
எமனிடம் இருந்து தனைக் காக்க சிவனிடம் சரணடைந்தான் மார்க்கண்டேயன்.
சரணடைந்த சூரபத்மனை தன் கொடியாகக் கொண்டான் குமரன்.
நானும் ஓடி ஓடிக் களைத்து விட்டேன்
போதுமென்ற நிலைக்கு வந்து விட்டேன்.
எனக்கு அடைக்கலம் தா ...
*நின்னைச் சரணடைந்தேன்*


449. தவறு தான்.
செல்லப் பெயரிட்டுனை அழைத்தது தவறு தான், மன்னித்திடு.
உனக்குப் பிடிக்காமல் போனது என் துரதிர்ஷ்டம் தான், பொருத்திடு.
*
தவறு செய்யாதார் எவருளார் ?
இருப்பின் அவர் மனிதரிலார்.
*
ராமன் கடவுள் தானே;
மறைந்திருந்து பாணம் எய்ததும், மனைவி மேல் சந்தேகப்பட்டதும், மான் பொய் என்றறிந்தும் அதன் பின் ஓடியதும், தவறு தானே;
இருந்தும் அவனைத் தொழுவது தவறில்லை தானே.
*
புரிந்து கொள் அன்பே,
தவறு செய்யும் மனிதம்.
அதையுணர்ந்து மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் தெய்வம்.
மறந்து மன்னிக்கத் தெரிந்தவள் தெய்வத்தின் தெய்வம்.
*
மலரே இன்னும் மௌனமேன் கூறு.
என் *கண்மணியே ... பேசு*


448. வண்டுகளைத்தான் காணவில்லை.
பூத்து தேன் வடிய மலர்கள் திறந்து கிடக்கின்றன.
கொத்தியுண்ண பறவையினங்கள் வருவதில்லை.
காய் பழம் யாவும் கனிந்து மரத்தில் தொங்குகின்றன.
பார்த்து ரசிக்க ஆளுமில்லை, ஆர்வமுமில்லை.
வெண்ணிலவு வானில் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கிறது.
நனைந்து விளையாட பிள்ளைகள் யாருமில்லை.
மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.
மரத்தின் பின்னே மறைந்து விளையாடவும், புல்தரையினில் படுத்து உருண்டு பேசிப் பழகவும், நீரோடையில் ஆடி மகிழவும் காதலர்கள் தான் யாருமில்லை.
*காடு திறந்து கிடக்கின்றது*

Saturday, August 10, 2019

பொன்மாலைப் பொழுதில் 59

447. சபரிக்குத் தெரியும், ராமன் தன்னை தேடி  வருவான் என்று.
கம்சனுக்குத் தெரியும் கண்ணன் தன்னைக் கொல்வதற்காகவே பிறந்தவனென்று.
முருகனுக்குத் தெரியும், குற வள்ளி தனக்காக காத்திருக்கிறாளென்று.
படிக்கும் பழக்கம் குறையுமென்று வள்ளுவருக்கு தெரியும், அதனாலே 2 அடிகளில் கருத்து சொன்னார்.
சரி, உனக்குத் தெரியுமா?
*மாயா மாயா மனமோகனா, நான் உனக்காகப் பிறந்தேனடா*
446. என்... அதே கல்லூரியில் மாணவன்
பார்வையாலேயே மேய்பவன்
படிப்பில் வல்லவன்
பழக்க வழக்கங்களில் நல்லவன், போல் தான் தெரிபவன்
விழியசைவை உணர்ந்து கொண்டு நடப்பவன்
இசைக் கலைஞன், நிபுணன்
சாதனைகள் பல புரியக்கூடிய தகுதி உள்ளவன்
கொஞ்சம் கொஞ்சமாய் எனை பாதித்தவன்
என் சிந்தனைகளைக் கெடுத்தவன்
எனைத் தன் பக்கம் இழுத்து கொண்டக் கள்வன்
ஆனால் இனியவன், இதுவரை பேசியதில்லை
*யாரோ இவன் ... யாரோ இவன்*


444. மறைந்திருந்து வாலி மீது அம்பு தொடுப்பது தவறென லக்ஷ்மணன் சொல்லத்தான் நினைத்தான்.
ராவணன் செய்வது தவறு என்று மண்டோதரி சொல்லத் தான் நினைத்தாள்.
'துரியோதனா தவறு செய்கிறாய்' என்று  திருதிராஷ்ட்ரன் சொல்லத்தான் நினைத்தான்.
பெரிய பழுவேட்டையர் நந்தினியை மணந்தது தவறென்று சோழ நாடு சொல்லத்தான் நினைத்தது.
அகலிகையை அடைய இந்திரன்
மாறு வேடமணிவது தவறென சொல்லத்தான் நினைத்தனர்.
நானும் .... சத்தியமாய் ... உன்...
உன் அன்பு அறிவு ... ஈர்க்கப்பட்டு... பலமுறை ... சரி முடிவாக, உனை உனை நான் ... காதலிக்கிறேன் ....
..... ..... ..... ..... ..... .....
..... ..... ..... ..... ..... .....
என்ற உண்மையை *சொல்லத்தான் நினைக்கிறேன்*


442. வயதுக்கு வந்தாகிவிட்டாது.
அனவரதமும கனவில் மனம் மிதக்க ஆரம்பித்துவிட்டது.
நோக்கும் எல்லாவற்றின் மீதும்
நேசம் நெஞ்சில் நிறைகின்றது
காதலென்று இதைப்பெயரிட்டுக் கொள்ள ஆசையாயிருக்கிறது
கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் சுண்டிவிட்டால் போதும்,
கவிதை அருவியாய்க் கொட்டுகிறது.
எல்லாம் தயார்,
கூடக் கொஞ்சி விளையாட ஜோடி மட்டும் வேண்டும்
மண்ணிலிருக்கும் எவரும் எனை மதிப்பதில்லை, எனவே
*வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?*


441. முருகனின் கோபம் தணிய
பார்வதி சிவனின் சில திருவிளையாடற் சேதிகளை எடுத்துரைத்தாள்.
வியாசரின் சிஸ்யர் வைசம்பாயர்
ஜனமேஜயனுக்கு மகாபாரத சேதிகள் பலவற்றை சொன்னார்.
இலங்கை சென்று அருள்மொழி வர்மனை சந்தித்து
வந்தியத் தேவன் சேதி பல தெரிவித்தான்.
ஜானுவும் ராமும் ஒரே இரவில்
22 வருட சேதிகளைப் பரிமாறிக்கொண்டனர்.
என்னிடமும் இருக்கே சேதி சில, யாரிடம் சொல்ல? ம்ம்ம் ...
ஆம், அது தான் சரி, வேகமாய்ப் பரவும்,
*தென்றல் காத்தே ... சேதி ஒன்னு கேட்டியா?*


440. வருவேன் எனறாயே,
மழை வரும் முன் வந்திடுவேன் என்றாயே,
வாக்குறுதி வேறு தந்தாயே,
மழை நீர் மண் தீண்டு முன் தீண்டு தூரத்திலிருப்பேன் என்றாயே,
பச்சைப் புற்களின் மேல் பாவை வந்தமர்ந்திருப்பேன் என்றாயே,
நான் மழைக் கவிதை தர நீ மடி தருவேன் என்றாயே,
தாவணியைக் குடையாக்கி, நான் நனையாது காப்பேன் என்றாயே,
இதோ மழை ... நனைகிறேன் நான்
மறைந்து நின்று நான் தவிப்பதைக் கண்டு ரசிக்கிறாயோ ? இல்லை வர முடியாதுத் தவிக்கிறாயோ?
என் மனங்கவர்ந்தவளே, மயிலே,
*அடி நீ ... எங்கே?*

439. பரதன் நாடாளட்டும் ராமன் கானகம் புகவேண்டாமென்று கெஞ்சினான் தசரதன், கேட்கவில்லை கைகேயி.
இது பொய் மான், ஏதோ அசுரனின் சூழ்ச்சி, இது வேண்டாம் என்றான் லக்ஷ்மணன், கேட்கவில்லை சீதை.
ஏதோ பின்பலத்தோடு சண்டைக்கு நிற்கிறான், போகதே என்றாள் தாரை. கேட்கவில்லை வாலி.
சூது அதர்மம் கூடாதென்று பல அற உரை கூறினர் பீஷ்மரும் விதுரரும், கேட்கவில்லையே துரியோதனன்.
யாகத்திற்கு அழைக்கவில்லை தக்ஷன், நீ போக வேணாமென்றான் சிவன், கேட்கவில்லையே சக்தி.
இந்த வழியில் வந்தவள் தானே நானும், வழிதல் கூடாது, ஆவென்று பார்க்கக்கூடாது  என்று கட்டளை இட்டும் ... ம்ம்ம் ... *சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது*

438. விலகி விலகி நின்றேன்.
பழக பயந்தேன். கூச்சப்பட்டேன்,
மெல்ல நீ அன்பாய்ப் பேச சகஜமானேன்.
உண்மை உணர்ந்தேன், பால் தேன் போல் உன் நட்பு, சுவைத்தேன், ரசித்தேன், சிரித்தேன், விரும்பினேன், காத்திருந்தேன்,
நிறைய  எதிர்பார்த்தேன், பாராதிருந்தால் கோபம் கொண்டேன்.
அழுதேன், பிதற்றினேன், தொழுதேன், தவம் செய்தேன்,
வேறேதும் வேண்டேன், உண்மையைச் சொல்கிறேன்,
நான் *மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன்*