Tuesday, January 24, 2017

கண்ணோட்டம்




அழுக்காக்கிய ஆடையை,
நீரில் நனைத்துத் துவைத்துக்
காய வைத்தேன்.
காய வைத்த ஆடையிலிருந்து
தனியே பிரிந்திருந்தது
ஒரு நூல்.
தனியே பிரிந்திருந்த நூலிலிருந்து
பனித்துளி போல் நீர்
சொட்டு சொட்டாய்க் கொட்டியது.
சொட்டும் நீரைப் ரசித்து
'கவிதை… கவிதை’ என்றேன்.

'துணியைக்
காயப்போடும்முன்
ஈரம் போக பிழியனும் னு கூடத் தெரியாது ?
எருமை எருமை' என்றாள்.

Monday, January 16, 2017

ஓம்



மாவு அரைக்கும் ஓசை
வெளியே பட்டாசு சத்தம்
இன்னும் உறங்காத பறவையின் ஒலி
மனதின் ஒரு மூலையில்
கொஞ்ச நேரத்திற்கு முன்
பார்த்துக் கேட்டு ரசித்த
'எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி தென்றலமாதிரி'
பாடல் வரிகள்
அப்பாட்டிற்கு முன் கேட்ட
'தொடு தொடு வெனவே' பாடல்
மூளையில்,
மனதின் இன்னொரு மூலையில்,
இத்தனைக்கும் இடையில்
'ஓம்' என்ற மெல்லிய ஓசையினிடையில்
'ஓம்' என்று உச்சரித்துக்கொண்டு
தியானத்தில் நான்.