Monday, January 16, 2017

ஓம்



மாவு அரைக்கும் ஓசை
வெளியே பட்டாசு சத்தம்
இன்னும் உறங்காத பறவையின் ஒலி
மனதின் ஒரு மூலையில்
கொஞ்ச நேரத்திற்கு முன்
பார்த்துக் கேட்டு ரசித்த
'எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி தென்றலமாதிரி'
பாடல் வரிகள்
அப்பாட்டிற்கு முன் கேட்ட
'தொடு தொடு வெனவே' பாடல்
மூளையில்,
மனதின் இன்னொரு மூலையில்,
இத்தனைக்கும் இடையில்
'ஓம்' என்ற மெல்லிய ஓசையினிடையில்
'ஓம்' என்று உச்சரித்துக்கொண்டு
தியானத்தில் நான்.

No comments:

Post a Comment