Friday, May 31, 2013

திருவாசகம் - ஆனந்த மாலை

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிந்தவர் இன்னொரு
பிறவி இல்லாத
பாக்கியம் பெற்றனர்.

பூவால் உனை அர்ச்சித்தோர்
பூலோகம் நீங்கி
தேவலோகத்தில்
தேவர்களோடு தேவர்களாயினர்.

கல் நெஞ்சன் நான்,
செய்ததெல்லாம் பாவம் தான் - உமையோனே
உன் துணை கிட்டினால்
போகும் என் துயரம் தான்.

அரிதர்க்கரிய பிறவி தந்தாய்.
அறியாமல் கெட்டேன் நான், இறைவா .
அடியார் எவரோடும் சேராமல்
ஆளானேன் கொடிய நோய்க் இரையாய்.

ஒழுக்கம் இல்லாமல்
விருப்பம் போல் ஆடிக்கிடந்தேன்.
அன்போடெனைக் காக்கும் எம்பெருமானே,
உன்னடி நான் சேர்வது எந்நாளோ ?

தாயாய் இருந்து எனை வளர்த்தவனே
நாயாய் உன் காலடியில்
நான் கிடக்கேன்,
அடிமையாய் எனைக் கருதாது - உன்
அடியவன் ஆக்கி
அருள்தருவாய், ஐயனே.

கெட்டவன் நான் - நீயும்
கை விட்டால் காப்பது யார் ?
அஞ்சேல் என்றாறுதல்
சொல்வார் யார் ?
எனைக் காப்பதுன் கடமையன்றோ.
காக்க நீ வரணும் இன்றே.

நரியைப் பரியாக்கி
நாடகம்  நடத்திய
நாயகனே, நல்லொளியே,
நான் செய்வதறியாது  திகைக்கிறேன்
நல்வழிப்படுத்திக் காப்பாற்று
நீ.

Saturday, May 11, 2013

திருப்பட்டூர்

தேதி: 6-May -2013


ஸ்தலப் பாடல்

ஆரூர் மூலட்டானம் ஆனை காவும்
   ஆக்கூரில் தான்தோன்றி மாடமாவூர்
பேரூர் பிரம்மபுரம் பேராவூரும்
   பெருந்துறை காம்பிலி திருபீடவூர் பேணும்
 கூரார் குறுக்கை வீரட்டானமும்
   கோட்டூர் குடமுக்கு சோழம்மும்
காரார் கழுக்குன்றும் காணப்பேரும்
   கயிலாய நாதனையே காணலாமே

                                                  - அப்பர்


Seen in the foto below, My kid & my brother's kid.


The beautiful entrance to the Shiva temple.


Another foto of the temple entrance.


This is the Shiva temple at Thiruppattur. There's a Brahma temple which is famous @ Thirupattur. The Ishwar at this temple is called Brahmapureeswar.