Tuesday, July 8, 2014

அவள்



பல சுவைகள் நிறைந்த
பருக முடியா பஞ்சாமிர்தம்;

வீட்டில் அமர்ந்திருக்கும்
வாய் திறந்து பேசும் விக்கிரகம்;

புவியில் மிதக்கும்
ஆனால் புக முடியா சொர்க்கம்;

அனுபவிக்க முடியாத சோபிதம்;
பறித்து முகர முடியாத கமலம்;

காண முடியா நர்த்தனம்;
கேட்க முடியா கீர்த்தனம்;
நாசி உணர முடியா சுகந்தம்;

எங்கோ மறைவில் இருக்கும் ஏகாந்தம், அவளை  
எண்ணிக் கிடப்பதிலே இருக்குது பேரானந்தம்;

Tuesday, July 1, 2014

பாவங்கள்



பிறக்க வைத்தது நீ,
வளர வைத்தது நீ,
நான்கு கலைகளை நன்கு கற்க வைத்தது நீ,
வாழ்க்கையில் அலைய விட்டு,
அனுபவிக்க வைத்து,
பின் அழ வைப்பது - எல்லாம் நீ;

இதில்
என் பாவங்கள் என்பது
எங்கிருந்து வருகிறது, இறைவா?