Tuesday, July 8, 2014

அவள்



பல சுவைகள் நிறைந்த
பருக முடியா பஞ்சாமிர்தம்;

வீட்டில் அமர்ந்திருக்கும்
வாய் திறந்து பேசும் விக்கிரகம்;

புவியில் மிதக்கும்
ஆனால் புக முடியா சொர்க்கம்;

அனுபவிக்க முடியாத சோபிதம்;
பறித்து முகர முடியாத கமலம்;

காண முடியா நர்த்தனம்;
கேட்க முடியா கீர்த்தனம்;
நாசி உணர முடியா சுகந்தம்;

எங்கோ மறைவில் இருக்கும் ஏகாந்தம், அவளை  
எண்ணிக் கிடப்பதிலே இருக்குது பேரானந்தம்;

No comments:

Post a Comment