Monday, September 15, 2014

கண்ணே நீ வந்துவிடு

காலையில் கண் விழிக்குமுன்னே,
சூரியக் கதிர்கள் எனைச் சுடுமுன்னே,
குயில் வந்து கூவி என்னுறக்கம் களைக்குமுன்னே,
கண்ணே நீயென் கனவிலாவது வந்துவிடு;

காதலன் நானுனைக் கட்டிப்பிடித்து
காதலிக்க இடம்கொடு;

முத்தமிட்டு முத்தம் பெற்று எனை
மோகத்தீயில் ஆழ்த்திவிடு;

கடமைகள் எனை உருட்டி மிரட்டி அடக்கும் முன்
உனை ஆள விட்டுக்கொடு;

 

No comments:

Post a Comment