Sunday, August 31, 2014

அடுத்த ஜென்மத்துக் காதலி



அடுத்த ஜென்மத்துக் காதலி 
---------------------------------------
கண்டாங்கிச் சேலையில்
காலை வேளையில்,
நயனங்களால்
நலம் விசாரிக்கும்
நங்கை ஒருத்தி
நானிருக்கும் அறைக்கு வந்தாள்
நறுமணம் வீசும்
நாலு முழப் பூவோடு;

மை தடவினாள் கண்ணில்;
குறுகுறுப் பார்வை கருவிழியில்;
கண்டோர் தன்னை மறப்பர் அவள் எழிலில்;
தங்க நிற ஆடையில், தத்தையின் ஜொலிப்பில்;

ஒரு பூவே பூ விற்கும் பொழுதது;
அப்பூவின் புன்னகை முன்
போட்டியிட முடியாது
பொன்நகை தவித்தது;

கதவைப் பிடித்துக் கொண்டு
கன்னி வெட்கத்தில் தள்ளி நின்றாள்;
காதலென்று சொல்ல முடியாதெனினும்
காளை என்னைக் கவர்ந்திழுத்தாள்;
அடுத்த ஜென்மத்தில் அழகி நீயென்
அகமுடையாளாய் வர நான் ஆசிர்வதிக்க
அசட்டுச் சிரிப்பு ஒன்று அளித்துவிட்டு
அங்கிருந்து நகர்ந்தாள், என்னெஞ்சை விட்டு நீங்காள்;

1 comment:

  1. வணக்கம்
    தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete