அன்று...
மழை நாளில் ஒரு நாள் 
அவள் விரலோடு விளையாடிக்கொண்டே நான்
என் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு அவள்;
கவிதை ஒன்று சொல்லேன் என்றாள்;
   இரு அற்புதக் கவிதைகளை 
   இறுக்கி பிடித்துக் கொண்டு
   படிக்கவிடாத பாவையே... 
என்று ஆரம்பித்தேன்;
முதுகில் குத்தினாள்; 
வேறு சொல் என்று கட்டளையிட்டாள்;  
   நர்த்தனம் ஆடும் விழிகள்;
   நறுமணம் வீசும் மொழிகள்;
   நிலவின் நகல் முகம்...
ஆகா அற்புதம், அப்புறம் ... என்றாள் 
  உண்மையைச் சொல்லடி 
சொல்லுகிறேன், மேலே சொல் என்றாள்;
   உன் தங்கை மட்டும் 
   எப்படி இப்படி அழகாய் இருக்கிறாள் 
என்று முடித்தேன்;
கோபத்தில் என்னைக் கடித்து விட்டு 
விருட்டென்று சென்றுவிட்டாள்;
இதே மழை நாளில் தான் ஒரு நாள்...
No comments:
Post a Comment