அவள்,
அழகாய் இருப்பாள் என்று தனியாய்ச் சொல்லவேண்டுமா
என்ன ?
அலுவலகத்தில், என் இருக்கைக்குக் கொஞ்சம்
தள்ளி;
இன்று நீல நிறம், வேறு உடை,
ஆனால் 
பக்கத்து இருக்கைப் பையனுடன் 
அதே சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
நேற்று ஒருமாதிரி  பச்சை நிறத்தில் ஒரு ஆடை,
பக்கத்து இருக்கைப் பையனுடன் 
சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
போன வாரமும் இதே கதைதான்.
நாளை அலுவலகத்துக்கு 
என்ன நிற உடையில் வருவாள் என்று தெரியாது,
ஆனால் வந்தபின் என்ன செய்வாள் என்பது
- 
இப்பொழுது உங்களுக்குக் கூட தெரிந்திருக்கும்
தானே.
என்னது ? நான் ஏன் அவளை நோட்டம்விடுகிறேனா
? 
நீங்க மட்டும் உத்தமரா என்ன ?
வேறு பெண், வேறு நிறம், வடிவம், 
ஆனால் உற்றுநோக்குவது 
 ஆண்களின் அடிப்படை உரிமை என்பது 
தங்களுக்குத் தெரியாதா என்ன ?
பெறுவார் இல்லையேல் ஈவார்க்கு ஏது பெருமை
?
சரி சரி 
நமக்குள் சண்டை வேண்டாம்,
என் சந்தேகமெல்லாம்,
இவர்கள் அப்படி என்னதான் பேசுவார்கள் என்பதைப்
பற்றியில்லை,
வார விடுமுறை நாட்களில் 
இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான்
என் கவலையெல்லாம்.
வயசாகிடுச்சே கலியபெருமாளே ! 
வயசாகிடுச்சே கலியபெருமாளே !.....
ReplyDeleteவித்தியாசமான பகிர்வு...