Friday, October 13, 2017

பொன்மாலைப் பொழுதில் - 2

கோவில்ச் சிலையழகும்
திருவாரூர்த் தேரழகும்
தோகை விரித்தாடும் மயிலழகும்
ராஜா ரவிவர்மாவின் உயிரோவிய அழகும்
இத்தனையும் இணைந்தும்
ஈடாகா,
வஞ்சியுந்தன் பேரழகை
*என்னவென்று சொல்வதம்மா*
---
நாய் கூட நாடாத உன்னை
நாடே நோட்டமிடுவதாய் நம்புவாய்
நீயே, நீயாகவும் அவளாகவும் மாறி மாறிப் பேசிக் கொள்(ல்)வாய்
அவளருகில் இல்லாப்பொழுது
சகாரா பாலைவனத்தில்
சாகக்கிடப்பதாய் உணர்வாய்
கூட இருந்தாலோ
கூவம் நதிக்கரையும்
தேன் பாயும் தேம்ஸ் நதியாய்த் தோன்றும்.
எல்லாம்
*காதல் ... மயக்கம்*
---
விடிந்ததும் விலகி, மீண்டும் வருகிறது இரவு
உண்டதும் மறைந்து, மீண்டும் எடுக்கிறது பசி
வெட்டியதும் உடைந்து, மீண்டும் வளர்கிறது நகம்.
நான் கண்டது கனவா? இருக்கட்டும்
நாளையும் நீ ... கனவிலாவது
*மீண்டும் மீண்டும் வா*
---

என்ன வேலையினிடையில்  இருந்தாலும்
எத்தனை குழப்பங்கள் என்கூட இருந்தாலும்
கண்மூடிக் கொஞ்சமுனை நினைத்தாலோ
நெஞ்சில்
*ஆனந்த யாழை மீட்டுகிறாய்*
---
பிரிந்துதான் போனோன்
மறந்தா போனேன் ?
விலகித்தான் இருக்கிறேன்
வெறுப்புடனா இருக்கிறேன் ?

சரி சரி
*மறுவார்த்தை பேசாதே*
---
நிறைய உழைத்துக் களைத்திருப்பாய்
மனதில் பாரம் சுமந்து ஓய்ந்திருப்பாய்
மடியில் தலை சாய்த்து உறங்கிடு
*ஆரிரோ ஆரிரோ
சொல்லவோ பாய்போட்டு*
---
பார்த்துப் பேசி பழகியதும்
சிரித்து ரசித்து உருகியதும்
ஆடிப் பாடி திரிந்ததும்
இன்று நினைத்து பார்த்தாலும் ...
*லேசாப் பறக்குது மனசு*
---
என்ன வேண்டுமென்றேன்
ஏது உன் ஆசையென்றேன்
ஏதாவது இன்றாவது சொல்லென்றேன்
ஏந்திழையாள் வாய் திறந்தாள்
*ஒன்றா இரண்டா ஆசைகள்*
---
கண்ணடுத்தாய்
கிச்சுகிச்சுமூட்டினாய்
தோளில் தலை சாய்த்தாய்
போகனுமென்கிறாயே
*இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதா என்ன?*
---
இடியாய் இடித்து மேகம் பேச
மெல்லக் கூவி குயில் பேச
பூவே, பூவைப்போன்ற பூவையே,
*மலரே, மௌனமா ?*
---
கண்படு தூரத்தில் இல்லை
பேசவும் வாய்ப்பில்லை
 கவலையில்லை
 என்னுள்ளே தானே நீ,
*கனவாய்! காற்றாய்!*
---

No comments:

Post a Comment