Tuesday, September 13, 2011

ஆடை அபகரணம் - 9

"குளிர்ந்த நீரில்
இத்தனை நேரம்,
வெளி வர முடியாது
வேதனைப்படுகிறோம்;
சந்தோசமாய் மரத்தில்
சாய்ந்து அமர்ந்து எங்கள்
சங்கடங்களை ரசித்துவருகிறாய்;
சத்தம்போட்டு ஊர்
சனங்களை அழைக்கலாமென்றால் எங்கள்
சத்தம் அவர்தம்
செவிக்கெட்டா தூரத்தில் நாமிருக்கிறோம்;
எங்களோடு நீ மட்டும்,
எந்த உதவியும் செய்யாது
ஏராளமான உபத்திரவம் செய்துகொண்டு;
என்றும் உன்னோடு இணைந்திருக்கவே
எங்கள் விருப்பம்,
எம் தாயின் சம்மதத்திற்காக
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்;
எல்லோரையும் என்றும் காத்தருளும்
எசொதைக் கண்ணா,
எமது ஆடை தந்து
எமக்கருள வேண்டுகிறோம்";

கன்னியர் மேல்
கரிசனம் காட்ட எண்ணினான்,
கன்னியர்க்கு அருள் புரியக்
காலம் இதுவே என்றுக்
கருதினான் கண்ணன்;

"கண் மூடிக் கொள்வேன்,
கன்னியர் ஒவ்வொருவராய்க்
கை தலை போல் தூக்கி
கண்மூடிப் பிரார்த்தித்து
கரை ஏறுங்கள்,
ஆடை அணிகலன்
அணிந்துகொள்ளுங்கள்,
அடியேனை
அடையும் பாக்கியம் பெறுவீர்கள்" என்றே
ஆசிர்வதித்து
அங்கிருந்து மறைந்தான்
ஆயர்பாடிக் கண்ணன்.

                                                                        ( லீலை முடிவுற்றது )

No comments:

Post a Comment