Thursday, September 22, 2011

கந்த புராணம் - 8

அடுத்த நாள் போருக்கு
அதிரடியாய் நுழைந்தான்
அரக்கன் சிம்ஹமுகன்;
அழகன் முருகனின்
அனைத்து படை வீரர்களையும்
அலறியடித்து ஓடவைத்தான்;

மந்திரக் கயிறால் வீரபாகுவையும்
மற்ற வீரர்களையும் கட்டித்
தூக்கி எறிந்தான் போர்களத்தை விட்டு வெகு
தூரத்திற்கு;

சுப்பிரமணியன் இந்த
சூழ்ச்சியை உணர்ந்து தன்
சூலம் வில் அம்பு எல்லா
பானங்களையும் எரிந்து தன்
படை வீரர்களை மீட்டான்;

சிம்ஹமுகன்
சுப்பிரமணியனுடன் போரிடத்துணிந்தான்.
கடும் போர் செய்து
களைத்துப்போனான்;
கடைசியில் முருகன்
இந்திராயுதத்தை எய்தி
எதிரியை வீழ்த்தினான்;


தன் தவறை உணர்ந்து
திருந்தி மன்னித்தருள வேண்டினான்
சிம்ஹமுகன்;
அடைக்கலம்
அடைந்தவர்கெல்லாம்
அருள் செய்யும்
அந்த ஆறுமுகன்
அவ் அரக்கனையும்
ஆசீர்வதித்தான்;

                                    சூரபதுமனும் சுப்ரமணியனும்

போரிடத் தொடங்கினர் இருவரும்;
வேலனின் வீரத்தைப் பார்த்து
வியந்து போனான் சூரபதுமன்;
மாயம் பல செய்தான்;
இறந்தவர்களை மீண்டும்
இறவாதவர்களாக்கினான்;
தோரோடு
திடீரென்று
தலைமறைவானான்;
ஆறுமுகன்
அஸ்திரம் பல
அனுப்பி
அரக்கன்
அஸ்திரத்தை எல்லாம்
அபகரித்தான்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment