Wednesday, September 14, 2011

பேசத் துடிக்குது பித்து நெஞ்சம்

பேசத் துடிக்குது
பித்து நெஞ்சம்.

எனக்கு உன் மேல் கோபமுண்டு;
உனக்கும் என் மேல் கோபமுண்டு;
இருந்தும்
பேசத் துடிக்கிறது
பித்து நெஞ்சம்.

எதையோச் சொல்லத் துடிக்குது மனசு.
எப்படிச் சொல்வதெனத் தெரியாது தவிக்குது;
சொல்லவும் தெரியாது
சொல்லாதிருக்கவும் முடியாது;
பசியும் பொறுக்க முடியாது,
உண்ணவும் பிடிக்காது
....
பேசத் துடிக்கிறது
பித்து நெஞ்சம்.

ஏனோ எனைப் புரிந்துகொள்ள
மறுக்கிறாய்,
என் காதலை,
என் எண்ணங்களை,
என் ஆசையை,
ஏன் உன்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை ?

இருதயத்தை
இரண்டாக உடைத்தாய்;
என் சொல்லைக் கேட்க மறுத்தாய்;
என்னையும் துறந்து
எங்கோ மறைந்துவிட்டாய்;

நீ
அருகிலிருக்கையில்
அறியாத
உணர்வுகள்
விலகி நிற்கையில்
உணர்ந்தது
உண்மையே;

பேசத் துடிக்குது
பித்து நெஞ்சம்.

நீ
விலகி நின்றது
வலிக்கவில்லையென
உதடுகள் சொன்னாலும்
உள்ளம் மறுக்குது;

எல்லைகள் கடந்திட
எண்ணுது நெஞ்சம்;
ஒருமுறைப் பார்த்திடப்
பலமுறை துடிக்குது விழிகள்;

நீ பேசக் கேட்டிருக்கிறேன்;
உன்னைத் தொட்டு உணர்ந்திருக்கிறேன்;
நீ சிரிக்க சிரித்திருக்கிறேன்;
நீ இல்லாது தனிமையில் அழுகிறேன் இப்போது;
இதுவும் ஒரு அனுபவமே;

கடைசிக் காலம் வரை - என்
கண்ணிலிருந்து மறையாதிரு;
உலகிற்கு நீ யாராயிருந்தாலும்
எனக்கு நீயே உலகம்;

தனியே என்னைத்
தவிக்க விட்டு
சென்றது எங்கு
சொல்லடி ?

சொல்லாமல்
சென்ற உன்
செயல் மட்டும்
கொள்ளாமல்
கொல்கிறது என்னை
அனுதினமும்.

காலம் காயம் ஆற்றும் வரை
காதல் இன்னும் கனியும் வரை,
இரவு பகல்,
மழை வெயில்,
எப்பொழுதும்,
எல்லாவிடத்திலும்,
என்றும்,

காத்திருக்கிறேன்
காத்திருப்பேன்
காதலியே உனக்காக;

No comments:

Post a Comment