Monday, September 5, 2011

ஆடை அபகரணம் - 1

ஆண்டாளும்
அவள் தோழியரும்
விடியும் முன் நீராடி
வரலாமென்று
ஒவ்வொருவராய்
ஓசையேதும்
ஒலிக்காது
புறப்பட்டு வந்தடைந்தனர்
பொதிகைக்கு.

சேர்ந்து கதை பேசி
சிரித்துக்கொண்டே வந்தால்
சிரீதரனுக்கு
செய்தி சென்றுவிடுமென்பதால்
தனித்தனியே வந்தனர்.

தாம் வந்த
பாதையெங்கும்
பதிந்த தம்
பாதத் தடயத்தையும்
அழித்துக்கொண்டே
வந்தனர்.

தாம் சென்ற வழி
தடயம்
தாமோதரனுக்கு
தெரிந்து விட்டால்
தமை நாடி வந்துவிடுவான்; அவன்
தம்மைத்
தொடரக்கூடாதென
உறுதியோடு இருந்தனர்
ஆண்டாளும், அவள் தோழியரும்;

இரவெல்லாம்
கோபியரோடு
கலந்தாடி
கலைத்திருப்பான்
கண்ணன், விடி
காலையிலே
கண் மூடி உறங்கியிருப்பான் எனத் தப்புக்
கணக்கு போட்டனர்.

                                                                        ( லீலை தொடரும் )

No comments:

Post a Comment