Wednesday, September 21, 2011

கந்த புராணம் - 7

                                    சிம்ஹமுகன்

சமாதானமாய்ச்
செல்வதே
சாதுர்யம்
என்று தான்
எண்ணுவதாய்
எடுத்துரைத்தான்
சூரபதுமனின்
தம்பி சிம்ஹமுகன்;

கோழையா நீ எனக்
கேள்வி கேட்டான் சூரபதுமன்;
உண்மை உணர்ந்து
நம்மைத் திருத்திக்கொள்வதைக்
கோழை என்றா சொல்வார்கள் என மறு
கேள்வி கேட்டான் சிம்ஹமுகன்;


எதிர்த்து பேசினால்
எரித்து விடுவேன்
என்று மிரட்டினான் அண்ணன்;

சொல்வதென் கடமை, சொல்லி விட்டேன்;
சோதரன் நீ முடிவெடு; உன்
சொல்லுக்கு என்றும் நான் துணையிருப்பேன்;
சொல்லி முடித்தான் சிம்ஹமுகன்;

அதற்குள் வீரபாகு
ஆறுமுகனை சந்தித்து
அரக்கன் போர்புரியும்
அவதியில் இருப்பதை
அறிவித்தான்;
அவ்வாறெனில்
அனைவரும் மகேந்திரபுரி நோக்கிச் செல்ல
ஆவன செய்வோம் என்றான்
ஆறுமுகன்.

                                    பான்கோபன்

மகேந்திரபுரியினுள் நுழையுமுன்னே
முருகனையும் அவன்
படையினரையும்
பான்கோபன், சூரபதுமனின்
பையன்
பாதை மறித்தான்;
தன்னோடு போரிட்டு வென்றால்
தொடர்ந்து செல்ல அனுமதிப்பதாய்ச்
சொன்னான்;

வீரபாகுவோடு போரிட்டான்;
வீழ்ந்தான் பான்கோபன்;
வெற்றி தந்த வீரபாகுவுக்கு
ஆசி தந்தான்
ஆறுமுகன்;

பாங்கோபனின் மரணம்
பாதித்தது சூரபதுமனை;
போருக்கு சிம்ஹமுகனை
போகப் பணிந்தான்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment