Thursday, September 1, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.5

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
   விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்க ளிழைத்தகோல
   மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
   உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா ! கேசவா! உன்
   முகத்தனகண்க ளல்லவே



வெள்ளை நுண் மணல் கொண்டே
வரைந்த எங்கள் கோலங்களை ஓடி
வந்தே நீ அழித்திட்டாலும், அதனால்
வருந்தி நாங்கள் அழுதிட்டாலும்
உன் திருமுகம் பார்க்கும்போதெல்லாம்
உள்ளம் உருகுதே, எப்படி
உன் மேல் கோபம் கொள்வோம்;
காதல் மட்டும் பொங்கி வழிகிறதே
கேசவா, மாதவா;
காண்போரை எல்லாம்
கவரும் கண்களைக்
கொண்டவனே, உன் மேல்
கோபம் கொள்வது இயலாதே;

No comments:

Post a Comment