Tuesday, September 27, 2011

அருள் தரும் அய்யப்பன் - 3

                                    மகிஷி

மகிசாசுரனின் சகோதரி
மகிஷி; தன் அண்ணன்
மரணத்துக்குக் காரணமான
அனைவரையும்
அழித்திடுவேன் என்று
ஆவேசம் கொண்டாள்;
அதற்குத் தேவையான சக்தி
தர வேண்டி
தவத்தில் அமர்ந்தாள்,
தமையன்
பிரார்த்தித்த
பிரம்மனை வேண்டி;
பிரம்மன் வந்தான்;
பரமசிவனுக்கும்
பரந்தாமன் விஷ்ணுவுக்கும்
பிறந்த
பிள்ளையால்
மட்டுமே உனக்கு
மரணம் என்றுரைத்து
மறைந்தான் பிரம்மன்;
மகிழ்ந்து போனாள் மகிஷி;
மண் விண் எல்லா இடத்திலும்
மகிழ்ச்சியாய் வாழ்ந்திருந்தோரை எல்லாம்
துன்புறுத்தி வந்தாள்;




                                    இராஜசேகர பாண்டியன்

பண்டைய திருவிதாங்கூரில்
பந்தளநாடு ஒரு
பகுதியாகும்;
பந்தள நாட்டை
பாண்டிய மன்னன் இராஜசேகர
பாண்டியன் ஆண்டு வந்தான்.
பராக்கிரமம்
பல நிறைந்த மன்னனுக்கு தன்
பின் அரசாள ஒரு
பிள்ளை இல்லை என்ற
பெரும் கவலை இருந்தது; சிவ
பெருமானைத் துதித்துத் தமக்கு
பிள்ளை அருள அவன்
பாதம்
பணிந்தான் தன்
பத்தினியோடு;


வேளை தவறாது சிவனை
வேண்டினர்;
அரசன் அரசியின்
ஆழ்ந்த கவலையை
ஆண்டவன் போக்க எண்ணினான்;


                                                                        ( அருள் தொடரும் )

No comments:

Post a Comment