Sunday, September 4, 2011

ஆண்டாள் திருப்பாவை - 11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
   செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றிலாத கோவலர்த்தம் பொற்கொடியே
   புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
   முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
   எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்


பல கறவை ஒருசேரக் கரந்தும்,
போரிட்டு எதிரி
பலரை வெல்லும்
பலம் பொருந்தியோரும்,
புகழ் என்றும் குறையா நம் குலத்தில்
பிரசித்தி பெற்றவளே,
பொற்கொல்லனின்
பெண்ணே, மயில்
போன்றவளே,
புற்றினுள் புகும்
பாம்பைப் போல் இடை சிருத்தவளே,
உன் வீட்டு முற்றத்தில்
உனக்காகக்
காத்திருக்கிறோம்;
கருநிறக் கண்ணன் புகழ் பாடாது
கண் வாய் திறவாது இன்னும் உறங்கிக்
கிடக்கிறாயே, எழுந்து வாராயோ ?

No comments:

Post a Comment