Monday, September 26, 2011

அருள் தரும் அய்யப்பன் - 2

                                    மகிசாசுரன்

அரம்பன் என்ற
அரக்கன்.
அவ்வரக்கனின்
அருமைப் புதல்வன்,
அவன் பெயர் மகிசாசுரன்.
அடவியில் கடுந்தவத்தில்
அந்த பிரம்மனை வேண்டி
அமர்ந்திருந்தான்;
அவன் தவத்தை எவ்விதத்திலும்
அசைக்க முடியாது, கடைசியில்
அவன் முன் தோன்றினார் பிரம்மன்;
'அய்யனே, இந்த
அவணியில் பிறந்த
ஆராலும் எனக்கு
அழிவு கூடாது’ எனக்கேட்க
அவ்வாறே வரம்
அளித்து மறைந்தார் பிரம்மன்.


வரத்தால் வந்த
வீரத்தில்
வையகத்தில்
வாழ்வோரையும்
வானகத்தில்
வாழும் தேவரையும்,
பல விதத்தில் துன்புறுத்தி,
பாவச் செயல்
பல புரிந்து வந்தான்,
இறக்கம் கொஞ்சம் கூட இல்லா
அரக்கன்.

                                    சண்டிகாதேவி

மூஉலகத்திலிருக்கும் தேவர்களனைவரும்
மும்மூர்த்திகளிடம் சென்று
முறையிட்டனர்
மூட அரக்கன்
தரும் துன்பத்திலிருந்து
தங்கள் எல்லோரையும் காக்க
தயை புரிய வேண்டினர்;


தனித் தனிய இருக்கும்
தங்களால் ஏதும் செய்ய முடியாதென்பதை உணர்ந்த
தேவர்களுக்கெல்லாம் தேவர்களான மும்மூர்த்திகளும்,
தம் சக்தி எல்லாம் ஒன்று திரட்டி
'சண்டிகாதேவி' என்ற
சக்தியைப் படைத்து மகிசாசுரனுடன்
சண்டையிடக் கேட்டுக்கொண்டனர்;
சண்டையில்
சாகடிக்கப்படான்
சண்டாளன் மகிசாசுரன்;


                                                                        ( அருள் தொடரும் )

No comments:

Post a Comment