Saturday, September 24, 2011

கந்த புராணம் - 10


அசுரர்களைக் கொன்ற
அப் பாவம் தீர
ஆறுமுகன் திருச்செந்தூரில்
அப்பன் சிவனைத் துதித்தான்;


தேவன் இந்திரன் தன் பெண்
தெய்வானையை,
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு
திருமணம் செய்துவித்தான்;

அதன் பின் முருகன்
வேடவப் பெண்
வள்ளியை மணம் செய்துகொண்டு
வள்ளி தெய்வானையோடு திருத்தணியில்
வாசிக்கலானான், தனை நாடி
வந்தோர்க்கெல்லாம் அருள்
வழங்கலானான் !




        முருகா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
        முத்துக் குமரா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
        கந்தா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
        கருணை வடிவாய்க் கண்டேன் - தந்தந்னா

        மயிலின் மேலே கண்டேன் - தந்தந்னா
        அந்த முகிலின் மேலும் கண்டேன் - தந்தந்னா
        கடலின் மேலே கண்டேன் - தந்தந்னா
        அந்த கரையின் மேலும் கண்டேன் - தந்தந்னா


அனைவருக்கும்
அருள் புரிவாய்
ஆறுமுகா !




3 comments:

  1. விசு! புஸ்தகமா போடலாம். போற்றக்கூடிய பணி! வாழ்க

    ReplyDelete
  2. பொறுமையாப்
    படிச்சதுக்கும்
    பாராட்டியதுக்கும்
    பல கோடி நன்றி RVS !!!

    ReplyDelete