Saturday, September 17, 2011

கந்த புராணம் - 3

                                    சூரபதுமன்

மாயை வென்றது; திரு
மணம் முடிந்தது;
மாயை புரிந்தவளுக்கு ஆண்
மகவு பிறந்தது;
மகனுக்கு
சூரபதுமன் எனப் பெயர்
சூட்டினாள்;


நாட்கள்
நகர்ந்தது;
மேலும் இரு
மகவு பிறந்தது
மாயாவுக்கு;
கிரௌஞ்சன், தராகன்
எனப் பெயரிட்டாள்; தேவர்களைப்
பழிவாங்கும் தன்
எண்ணத்தைப்
புதல்வர்களுக்குப்
புகட்டி வந்தாள்;

காசியப்பர்
தாயைப் பாதுகாக்கும்படி
தனயன்களுக்கு அறிவுறுத்தி
தன்
கடமையாற்ற
தனி வழி செல்ல,
தகுந்த நேரம் வந்ததென
தாய் எண்ணி,
சிவனை வழிபாடு,
சக்தி கேள்,
பலம் பொருந்தியவனாய் மாறு
கட்டளையிட்டாள் தாய்;
கடமையாற்றக்
கிளம்பினர்
தாய் சொல்லை மீறாத்
தனயர்;

                                    சிவம் தந்த வரம்

சிவனை எண்ணித்
தவம் இயற்றினார்;
வந்தது சிவம்;
தந்தது வரம்;
மூவுலகையும் ஆளவேண்டும், இறவா
வரம் வேண்டும்;
அண்ணன் கேட்டான்
ஆம் என்றனர் தம்பியர்;

இறவாது இருக்க
எவராலும் முடியாது;
என் சக்தி தவிர வேறு
எந்த சக்தியாலும் உன்னை
அழிக்க முடியாது,
மூவுலகுக்கும் நீயே
முதல்வன்;
வரம் தந்து
மறைந்தான்
மகாதேவன்;
வாங்கி வந்த
வரம் கேட்டு
மகிழ்ந்தாள்
மாயா;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment