Thursday, September 29, 2011

அருள் தரும் அய்யப்பன் - 5

அரசன் ஆண் மகவைப் பார்த்தான்;
அசையாது செய்வதறியாது நின்றான்;
அங்கோர் முனிவர் தோன்றினார்;

'மன்னா, உன் புத்திர சோகத்திற்கு
முற்று புள்ளி வை;
உன் கையில் இந்த மகவை வை;
மணியோடு பிறந்தவனுக்கு
மணிகண்டன் என்று பெயர் வை;
மகவின் அகவு பன்னிரண்டு ஆகும் வரை
மனதில் பொறுமை வை;
அதன் பின்
அனைவர்க்கும் புரியும்
அவன் பெருமை;'

முனிவர் மறைந்தார் புன்சிரிப்போடு;
மன்னன் அரண்மனை திரும்பினான் அக் குழந்தையோடு;

அளவற்ற மகிழ்ச்சி கொண்டான்;
அக் குழந்தையை தன் குழந்தையாகவே
அவன் எண்ணினான்;
அரசியிடம்
அனைத்தும் கூறினான்;
அவளும் அந்தக்
குழந்தையைக் கண்டு
குதூகலித்தாள்; தம்
குறை தீர்த்த ஈசுவரனைக்
கும்பிட்டு நன்றி தெரிவித்தாள்;


அடுத்து ஆள வாரிசு இல்லாததால்
அரசனின் எல்லாச் சொத்துக்களையும் தானே
அள்ளிக் கொள்ளலாம் என எண்ணிக் கிடந்த
அந்த அரண்மனையின் திவான் மட்டும்
அவதிக்குள்ளானான்;

                                                                        ( அருள் தொடரும் )

No comments:

Post a Comment