Tuesday, September 20, 2011

கந்த புராணம் - 6

                                    கிரௌஞ்சன், தராகன் அழிவு

கிரௌஞ்சன்
மலையாய் நின்று
முருகனை எதிர்கொண்டான்;
முருகனோ வேல் எடுத்தான்;
முக்கண்ணனை வணங்கி, வீசினான்;
மலையை இரண்டாய்ப் பிளந்தான்;
கிரௌஞ்சனை இல்லாது பண்ணினான்;

கிரௌஞ்சன் அழிந்ததைக்
கேள்விப்பட்ட தராகன்
குரோதம்
கொண்டான்;
குமாரனைக்
கொன்று திரும்புவேன் என்று
கிளம்பினான்;

தராகனைத்
துணிவுடன் எதிர்கொண்டான் முருகன்;
தவறுகளைத்
திருத்திக்கொள்ளவும்,
தேவர்களை விடுவிக்கவும்;

கோரிக்கை வைத்தான்
குமரன்;
கேட்க மறுத்தான்
அரக்கன்;

போர் செய்தான்;
தோற்றான்;
வேலுக்கு வெற்றி;
வாழ்த்தினர் வீரர்கள்;

தம்பியரின் மரணத்தில் அண்ணன்
தன் தவறை உணர்ந்து
திருந்தியிருப்பான், எனவே
தூதாக வீரபாகுவை அனுப்பினான், போரைத்
தடுக்க எண்ணினான்
திருமுருகன்;


சூடம் போல் காற்றில் கலந்து
சூரபதுமன் முன்னிலையில்
வெளிப்பட்டான்
வீரபாகு; போர்
விடுத்து தேவர்களை
விடுவிக்கக் கேட்டான்;
மறுத்தான் அரக்கன்;
மீண்டும் காற்றில்
மறைந்தான் தூதுவன்;

                                                                        ( தொடரும் )

1 comment:

  1. Good, but i miss some link i guess. Who is 'Krownjan"? why he suddenly coming to picture?

    ReplyDelete