Friday, September 2, 2011

ஆண்டாள் திருப்பாவை - 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
   மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
   போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
   தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
   தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


விரதமிருந்து நான் சுவர்க்கம்
புகுவேன் எனச் சொல்லும்
பெண்ணே,
கதவும் திறவாது, எங்கள்
கத்தலும்
காதில் போட்டுக் கொள்ளாது
கண் மூடிக் கிடக்கிறாயே,
நாராயண் புகழ் பாடி
நோன்பிருந்தால் நாம் கேட்கும்
நலமெல்லாம் நமக்களிப்பான்.
கும்பகர்ணன்,
தான் தோற்று இறந்த பிறகு
தன் தூக்கமெல்லாம்
உனக்களித்தானோ ?
ஆழ்ந்த உறக்கத்தில்
இருப்பவளே,
இக்கணமே
எழுந்து
எங்களோடு வாராய் !!!

No comments:

Post a Comment