Friday, September 23, 2011

கந்த புராணம் - 9

முருகன்
அரக்கன்
தேரைத்
தாக்கினான்; சூரபதுமன்
தூக்கி எறியப்பட்டான்;
ஆனால் அந்தத் தேரோ
ஆறுமுகனை வந்தடைந்தது;

பார்த்தான் சூரபதுமன்;
பறவை போல் உருமாற்றிக்கொண்டான்;
பாலசுப்ரமணியன் மேல்
பாய்ந்தான்;
மயில் மேல் ஏறினான்
முருகன்;
தன் வாளால் சூரபதுமன்
தாக்குதலைத்
தடுத்தான்;

மரமானான், மாயம் செய்தான்;
மறைந்து நின்றான்;


இருள், வெளிச்சம்
இருக்கையில் எங்கும் மறைய
இயலாது;
இவ்வாறு சொல்லி, அந்த மரத்தை
இரண்டாகப் பிளந்தான் முருகன்;

சூரபதுமன் தன்
சுய ரூபத்தில் மீண்டும்
தோன்றினான்;

முரட்டுக் காளையை மாறி, உன்னை
முட்டி மோதி வீழ்த்துவேன் என்றே
விரைந்து வர,
வெற்றிவேல் முருகன் தன்
வேலை அவன் மீது எய்த
சூரபதுமன் தோற்கடிக்கப்பட்டான்;

வடிவேலனின்
வீரர்கள்,
வான் வாழ் தேவர்கள்
வாழ்த்தினர்;


         ஆறுமுக தெய்வத்திற்கு அரகரோகரா !
         அழகான முருகனுக்கு அரகரோகரா !

         பரமசிவன் பாலனுக்கு அரகரோகரா !
         பன்னிருகை கொண்டவனுக்கு அரகரோகரா !

         சக்தி வடிவேலனுக்கு அரகரோகரா !
         சஞ்சலங்கள் தீர்ப்பவருக்கு அரகரோகரா !
                                                                                (நன்றி: ayyappan-ldc)


கண் மூடும் முன் தன்மேல்
கருணை காட்டக்
கேட்டுக் கொண்டான் சூரபதுமன்.

சூரபதுமா, நீ
மயிலாகவும் சேவலாகவும்
மாறி என்னோடு என்றும்
மறையாது இருப்பாய்
என்றே ஆசி வழங்கினான்
வேலவன்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment