Wednesday, September 28, 2011

அருள் தரும் அய்யப்பன் - 4

                                    மோகினி

பாற்கடலை ஒருமுறை
இமையோரும்
இராக்கர் குலத்தோரும்
இணைந்து கடைகையில்
இணையில்லா அமுதம் வெளிப்பட,
இமையோருக்கு
எதுவும் கொடுக்காது
எல்லாவற்றையும்
அரக்கர் குலத்தோரே
அபகரித்துக்கொள்ள,
அதனால்
அபாயம் பல நேரும் என்று
அறிந்த திருமால்,
அந்த இக்கட்டிலிருந்து
அரக்கர்களை திசைதிருப்ப
மோகினி வேடமேடுத்து அழகான ஒரு
மாது வடிவில் அரக்கர்
முன் தோன்றி அவர்களை
மயக்கி அந்த அமுதத்தை
தேவர்க்கே வழங்கினார்
திருமால்.



அழகான மோகினியைக் கண்ட
அந்த பரமசிவன்
அக்கணமே அவளை மணந்து,
அழகான ஒரு
ஆண்மகவைப் பிறக்கச் செய்தார்.
அக் குழந்தைக்கு ஒரு மணிமாலை
அணிவித்தார்;
அரசன் இராசசேகர பாண்டியனிடம்
அக் குழந்தையை சேர்ப்பிக்க
ஆயத்தம் செய்தார்;

                                    மணிகண்டன்

மன்னன் இராஜசேகரன் தன்
மற்ற பரிவாரங்களோடு ஒரு
முறை பம்பா நதிக்கரையில்
வேட்டையாடி வரும்
வேளையில் குழந்தையின்
அழுகுரல் கேட்க
அருகே சென்று பார்த்தார்;
அடுத்தென்ன செய்வதென
அறியாது திகைக்கையில்
அங்கொரு முனிவர் தோன்றினார்;



                                                                        ( அருள் தொடரும் )

No comments:

Post a Comment