Sunday, September 18, 2011

கந்த புராணம் - 4

                                    வரத்தால் வந்த வினை

மனிதம்
மிருகமானது;
தான் செல்லும் பாதை எங்கும்
தருமத்தைக் குலைத்தது;

தேவலோகம் சென்றனர்;
போர் செய்தனர்;
தேவர்களை வீழ்த்தினர்,
சிலரைச் சிறை வைத்தனர்;
பலரைத் தமக்குப்
பணி செய்யப்
பணிந்தனர்;
தேவர்களின்
தேவியரை
இட்ட பணி
கிட்ட பணி செய்துக்
கிடக்குமாறு
கட்டளை
இட்டனர்;



சூரபதுமன்
மகேந்திரபுரி என்ற மிக
அழகிய ஒரு நகரை
அமைத்து
ஆட்சிபுரிந்து வந்தான்.
அமரர் எல்லாம்
அந்நகரில் சேவகம் செய்துப்
பிழைத்து வந்தனர், தம்
நிலையை எண்ணி நொந்தனர்;

அரக்கனுக்கு வரம் தந்தான் சிவனே, நம்
அல்லல்களுக்கும் விடை தருவான் அவனே; என்று
கைலாயம் வந்தனர் தம்
கவலைகளுக்கு விடை தேடி;

கவலை எல்லாம் தீரும்; அவர்கள்
காலம் முடியும் நேரம் வரும்;
கலக்கம் வேண்டாம்; முக்
கண்ணன் மொழிந்தான்;

                                    ஆறுமுருகன் அவதாரம்

ஆறு முகம் கொண்டான் சிவன்;
ஆறு முகத்திலிருந்து
அனல் தரிவித்தான்;
அவ் அனலை வாயுவும்
அக்னியும்
அந்த சிவனின்
ஆணைப்படி கங்கையிடம் தர
அம்மங்கை அதனை இமையமலையிலிருக்கும்
சரவணப் பொய்கையில்
அர்ப்பணிக்க, அந்த
ஆறு நெருப்புப் பிளம்பிலிருந்து
அழகாய்
ஆறு குழந்தைகள்
அவதரிக்க, தேவ கன்னியர்
அருவர்
அவ்வழியே செல்கையில் கண்டு
ஆளுக்கு ஒரு குழந்தையை
அள்ளி எடுத்துக்கொண்டனர்;

கிருத்திகை எனப்படும் அக்
கன்னியர் ஆறு
குழந்தைகளையும்
கொஞ்சி
விளையாடி
வளர்த்து
வந்தனர்;


பார்வதி
பரமசிவனோடு தன்
பிள்ளைகளைப்
பார்க்க வந்தாள்;
ஆறு குழந்தைகளையும் ஒரு உருவம்,
ஆறு முகம், இரு
ஆறு கைகள் கொண்டவாறு
ஆக்கினாள்;
ஆறு முருகனை
ஆறுமுகன் என்று
அழைக்குமாறு
அறிவுறுத்தினாள்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment