Monday, September 19, 2011

கந்த புராணம் - 5

                                    அமிர்த வள்ளி, சுந்தர வள்ளி

விஷ்ணுவின் பெண்கள்
அமிர்த வள்ளியும் சுந்தர வள்ளியும்
சரவணனை மணமுடிக்க வேண்டி
சரவணப் பொய்கையில்
தவமிருந்தனர்.
சரவணன் அவர் முன் தோன்றி
இந்திரன் மகளாக
அமிர்த வள்ளி
அவதரிக்கையில்
அவளை மணந்து கொள்வதாகவும்,
சுந்தர வள்ளி
சிவ முனியின் மகளாகப்
பிறந்து
வேட்டையன் ஒருவனின்
வளர்ப்புப் பெண்ணாய்
வளர்ந்து
வரும் வேளையில் அவள்
வளைக்கரம் பிடிப்பதாயும்
வாக்குத் தந்தான்
வடிவேலன்.

                                    வேல்முருகன்

இதனைத் தொடர்ந்து சிவன்
இன்னும் சில வீரர்களை உருவாக்கி
இதோ வீரபாகுவும் மற்ற உன் வீரர்களும்;
இக்கணமே கிளம்பு;
இமையோர் துயர்
இல்லாது செய்திடு; என்றே
இயம்பினான் ஈஸ்வரன்;


தனயன்
தந்தையை
தலைவணங்கிக் கிளம்பினான்;
தந்தை
தனயனுக்கு ஒரு வேலாயுதம்
தந்தான்;
வேல் கொண்ட முருகன்
வேல்முருகன் என்றே
விளம்பப்பட்டான்;

வெற்றியோடு
வா
வேல்முருகா என்றே
வாழ்த்தி
வழியனுப்பினான்
விஸ்வேஸ்வரன்;


புயல் போல்
புறப்பட்டான் முருகன்
பாவக் காரியம்
பல செய்யும் சூர
பதுமனைப்
போரிட்டு வீழ்த்த;

வேல் முருகன் தலைமையில்
வேகமாய் முன்னேறிச் சென்றனர்
வீரபாகுவும் மற்ற
வீரர்களும், அசுரன்
சூரபதுமனை
வீழ்த்திட;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment