கண்ணன்
காத்திருந்தான், அவர்கள் 
வருமுன்னே
வந்தமர்ந்திருந்தான்,
ஆற்றின் மரக்கிளையில்;
இது ஏதுமறியாது
வந்தனர் கோதையர்;
அவிழ்த்தனர் தம் ஆடையை;
அம்மணம் ஆயினர்; 
ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர்;
கண்ணனோ கிளையில்;
கவர்ந்திழுத்தான் 
கீழே கிடக்கும் 
கன்னியரின் ஆடையெல்லாம்;
எடுத்தான் தன் குழலை;
ஊதினான், தான் 
அமர்ந்திருப்பதை 
அறிவித்தான்;
ஆடையில்லாது நீராடியோர்
ஐயோ ஐயோ என்று அலறினர்;
ஆபத்தா ? துணை வரவா என்றே 
கண்ணன் வினவினான்;
கிளையிலிருந்து கீழே
குதித்தான்;
கண்ணா நில் என்றே 
கத்தினர், கதறினார்;
ஆடை இல்லாது 
ஆற்றில் குளித்தது,
தவறென்றான் கண்ணன்.
தயை புரிய வேண்டினர்
பெண்கள்;
                                                                        ( லீலை தொடரும் )
No comments:
Post a Comment