Tuesday, September 6, 2011

ஆடை அபகரணம் - 2

கண்ணன்
காத்திருந்தான், அவர்கள்
வருமுன்னே
வந்தமர்ந்திருந்தான்,
ஆற்றின் மரக்கிளையில்;

இது ஏதுமறியாது
வந்தனர் கோதையர்;
அவிழ்த்தனர் தம் ஆடையை;
அம்மணம் ஆயினர்;
ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர்;

கண்ணனோ கிளையில்;
கவர்ந்திழுத்தான்
கீழே கிடக்கும்
கன்னியரின் ஆடையெல்லாம்;
எடுத்தான் தன் குழலை;
ஊதினான், தான்
அமர்ந்திருப்பதை
அறிவித்தான்;

ஆடையில்லாது நீராடியோர்
ஐயோ ஐயோ என்று அலறினர்;
ஆபத்தா ? துணை வரவா என்றே
கண்ணன் வினவினான்;
கிளையிலிருந்து கீழே
குதித்தான்;

கண்ணா நில் என்றே
கத்தினர், கதறினார்;
ஆடை இல்லாது
ஆற்றில் குளித்தது,
தவறென்றான் கண்ணன்.
தயை புரிய வேண்டினர்
பெண்கள்;

                                                                        ( லீலை தொடரும் )

No comments:

Post a Comment