Friday, September 9, 2011

ஆடை அபகரணம் - 5

"சிறுவனைப் போல் எங்களைச்
சீண்டி விளையாடுகிறாயே,
சிரீதரா ! இது உனக்குத் தகுமா ?"

"நான் சிறுவனா ?
துணியில்லாது
துவம்சம் செய்து குளித்து
வருண பகவானை
வருந்தச்செய்த
நீங்கள் சிறுமிகளா ?
இதையும் தவிர என்னைத்
தொட்டுப் பரவசம் அடைய
தயங்குகிறீர்களே."

"கண்ணா,
எங்கள் பெற்றோர்
இதற்கு ஒப்ப மாட்டர்,
இதுவே எங்கள் தயக்கத்துக்குக்
காரணம்".

இவ்வாறு
உரைத்ததும்
"எனக்குப் பெற்றோர் இல்லையா,
வானத்திலிருந்தா நான்
குதித்தேன்,
உங்களைத் தொட்டணைக்க
எனக்கு ஆசை இருக்கு,
என்னைத் தொட்டணைக்க
ஏன் உங்கட்கு ஆசை இல்லை"
என்றே வினவினான்
எசொதை மைந்தன்.

"கண்ணா,
பிறர்
பழித்துப்
பேச கண்டுகொள்ளாது
போய்விடுகிறாய் நீ.
நாங்களோ
மானம் வெட்கம்
மதித்துப்
பிழைக்கிறோம்".

"மானமற்றவனா நான் ?
மரியாதையாய்
மன்னிப்பு கோராவிட்டால்
மறுகணமே ஆடைகளோடு
மாயமாய்
மறைந்து விடுவேன் நான்"
பயமுறுத்தினான்
பலராமனுக்குப்
பின்னவன்.

                                                                        ( லீலை தொடரும் )

No comments:

Post a Comment