Saturday, October 1, 2011

அருள் தரும் அய்யப்பன் - 7

                                    புலிப்பால்

திவானின்
திட்டப்படி அரசி
தனக்குத்
தீராத
தலைவலி இருப்பதாய்த்
தெரிவித்தாள்;



அரசு வைத்தியரும்
அந்த திவானின்
அடிமை ஆனதால்
'அரசே, அரசியாரின்
அடாத வலி தீர
அடவியிலிருந்து புலிப்பால்
அவசியம்
ஆரேனும் கொண்டுவரவேண்டும்' என்றே
அரற்றினார்;

புலிப்பால் கொண்டுவந்தால்
பாதி ராஜ்யமே
பரிசாய்க் கிடைக்குமென்று
பறைசாற்றப்பட்டது; ஆனாலும்
பயம் காரணமாய்
புலிப்பால் கொணர ஒருவராலும் முடியாது
போயிற்று;


கவலை கொண்டான்
காவலன்;
கவலை எதற்கு, தான்
கண்முன் இருக்கையில் என்றான்
கடவுளருளால் கிடைத்த புத்திரன்;

தான் சென்றுத்
தாய்க்கு புலிப்பால் கொணர்ந்து
தருவதாய்ச் சொல்லி அத்
தருணமே கிளம்பினான் மணிகண்டன்;
தனக்கும் வேறு வழி இல்லாததால்
அரை மனதோடு
அதற்கு சம்மதித்தான்
அரசன்;

                                    மகிஷி மரணம்

புலிப்பாலுக்காக மணிகண்டன் கானகம்
புக, பரமசிவனின் கட்டளைப்
படி, மணிகண்டனைக் காக்க வேண்டி
பஞ்ச பூதங்கள் அவன் பின் கானகம்
புக,
அந்நேரம்
அமுதம் உண்ட தேவர்கள் மேல்
ஆத்திரம் கொண்ட மகிஷி
அவர்களை துன்புறுத்த
அவ்விடம் நோக்கி வர, மணிகண்டனை
ஆர் என்று அறியாது
அவனோடு சண்டையிட எத்தனிக்க,
அக்கணமே அவளைக் கொன்று தான்
அவதாரம் எடுத்த பணி முடித்து,
புலிப் பால் தேடிப்
பயணம் தொடர்ந்தான்;

                                                                        ( அருள் தொடரும் )

No comments:

Post a Comment