Monday, October 17, 2011

சுதாமா சரித்திரம் - 4

                                    துவாரகையில் சுதாமா

குருகுலம் விட்டு வந்த பின்
எசொதைக் கண்ணன்
என்னை எப்பொழுதாவது
எண்ணியிருப்பானா ?
என்னை இன்னும்
மறக்காது இருப்பானா ?
அவனைக் காணும் பாக்கியம்
எனக்குக் கிட்டுமா ?
ஏழை என் சிநேகம்
ஏற்புடையதன்று என்று
எண்ணுவானோ ? இன்னும் இதுபோல்
ஏராளமானக் கேள்விகள்
எழுந்தது சுதாமாவின் மனதுள்;
எழுந்த கேள்விகள்
எதற்கும் பதில் தெரியாது,
எல்லாமே கிருஷ்ணார்ப்பணம்
என்றெண்ணியப்படி
தூவரகை வந்தடைந்தார் சுதாமா;

துவாரகை -
அழகான ஒரு நகரம்;
ஆனந்தம் அங்கு எங்கும் உலவும்;

கம்பீரமானக்
கட்டிடங்கள்;
முகிலை முட்டும்
மாடமாளிகைகள்;
உயர்ந்து நிற்கும்
கோபுரங்கள்;

வளம் கொழிக்கும்
வயல்கள்; நற்
குணம் நிறைந்த
மனங்கள்;
ஆடு மாடு பால் தயிர் என்று
எதற்கும் குறையில்லாது
எங்கும் வளம்;

அழகான மாளிகைகளின் இடையே
அரசனின் மாளிகை எது என்றறிவது
அத்தனை சுலபம் இல்லாது போனது;
ஊர் மக்கள்
உதவி செய்தனர்;
உத்தமன் கண்ணன்
உறைவிடம் காண்பித்தனர்;

சுதாமா
அரண்மனையின் உள்ளே நுழைந்தார்,
பரந்தாமனைப்
பார்க்கப்
பலப் பிரதேசத்திலிருந்துப்
புரவலர்கள் பலர் வந்திருப்பதைப்
பார்த்தார், இத்தனைப்
பேர்களுக்கிடையில் இந்த ஏழையைப்
பார்க்கப் பிரியப்படுவானா கண்ணன்,
என்று எண்ணினார்;

நெஞ்சில் கண்ணனை
நினைத்தப்படியே, கண்ணில்
நீர் வந்தபடியிருக்க
தியானத்தில் அமர்ந்தார்
சுதாமா;
சுதாமா வந்ததைச்
சுந்தரன் கண்ணன்
உணர்ந்துக் கொண்டான்;
இக்கணமே அவரை
இங்கே அழைத்துவரத்
தம் பணியாளரைப் பணிந்தான்;

காவலர் வந்தனர்;
கண்ணன் அழைத்ததைச்
சுதாமாவிடம் சொன்னனர்;
கண்ணில் கண்ணீரோடு, நெஞ்சில்
கண்ணனைக் காணும் ஆசையோடு
காவலனோடு சுதாமா
அரண்மனை உள் சென்றார்;
ஆவலோடு கண்ணன்
அங்குக் காத்திருந்தான்;
                                                                        ( சரித்திரம் தொடரும் )

No comments:

Post a Comment