Tuesday, October 18, 2011

சுதாமா சரித்திரம் - 5

                                    சுதாமா கண்ணன் சந்திப்பு

சுதாமாவைக் வருவதை அறிந்ததும்,
ஜல் ஜல் ஜல் என்று தன் சலங்கை சப்திக்க
சுதாமாவை வரவேற்கக் கண்ணன் ஓடினான்;


அங்கிருந்து சுதாமா வர,
இங்கிருந்து கண்ணன் வர,
இருவரும் வழியில் சந்திக்க, கண்ணன்
இறுக்கிக் கட்டிக் கொண்டான்
சுதாமாவை, தன் பள்ளித் தோழனை;

     


இருவர் கண்களிலிருந்தும்
கண்ணீர் கொட்டியது;
இவர் கண்ணீரை அவர் துடைக்க,
அவர் கண்ணீரை இவர் துடைக்க,
இதையெல்லாம் கண்டோர் ஆனந்தித்து மகிழ,
கண்ணா உன்னை தரிசிக்க
என்ன பேறு செய்தேன் நான்
என்று சுதாமா கண்ணனை வணங்கித் துதிக்க,
கண்ணன் அவரை அணைத்து
அழைத்துச் சென்று
அவர் கால் சுத்தம் செய்து,
அந்த நீரைத் தன் தலையில்
அள்ளித் தெளித்துக் கொண்டார்;


பள்ளித் தோழர்கள்
படிக்கையில் நடந்த சுவாரஸ்யமான
பல நிகழ்வுகளைப்
பகிர்ந்துகொண்டனர்;
பேசிப் பேசிச் சிரித்துக் கொண்டனர்;

அன்று நடந்தது முதல்
அன்றாட நிகழ்ச்சி வரை
அனைத்தும் பேசினார்;

உலகளந்த உத்தமன்
உயிர்த்தோழன் சுதாமாவை
உணவு உண்ண அழைத்துச் சென்றான்;
வேலை செய்வோர்
வியந்து நோக்க தானே தன் கையால்
உணவு பரிமாறினான்;
உண்ணப் பணிந்தான்;



     

கோசும்பிரி, பச்சடி,
கூட்டு,
அவரை கீரைப் பொரியல்,
கிழங்கு வகைகள்,
முறுக்கு, பஜ்ஜி,
மெது வடை, ஆமை வடை,
தயிர் வடை,
பச்சரிசி சோறு,
பருக இளநீரு,
தக்காளி ரசம்,
மல்லி ரசம்,
பூண்டு ரசம்,
பல வித இனிப்பு வகைகள்,
ரவா லாடு, பேசின் லாடு,
ஜாங்கிரி, ஜிலேபி, போலி,
பால் பாயசம், பருப்புப் பாயசம்,
சேமியாப் பாயாசம்,
ஜவ்வரிசி பாயாசம்,
கெட்டித் தயிரு,
சுண்டக் காய்ச்சிய மாட்டுப் பால்
இன்னும் பல பலகாரங்கள்;

சுதாமா திகைக்கத் திகைக்கப் பரிமாறினான்;
தின்னச் சொல்லி வற்புறுத்தினான்;
போதும் என்றார் சுதாமா,
போதாது இன்னும் போடு என்றான் கண்ணன் ருக்மணியை;

வயிறு வெடித்துவிடும் என்றார்;
உடல் இளைத்திருக்கிறதே என்றான்;
முடியாது கண்ணா என்றார்;
முடியும் தின்ன என்றான்;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

No comments:

Post a Comment