Sunday, October 2, 2011

அருள் தரும் அய்யப்பன் - 8

                                    புலிப்பால்

மகிஷியைக் கொன்ற
மணிகண்டனை வாழ்த்தி பூ
மாறிப் பொழிந்தனர் தேவர்கள்;
மகேஸ்வரன் தன்
மகன் முன் தோன்றி வாழ்த்தினான்;

ஆண் புலியாக இந்திரன் உருமாறி வர,
பெண் புலியாக மற்ற தேவர்கள் தொடர்ந்து வர,
ஆண் புலி மீது
அமர்ந்து
அரண்மனை வந்தடைந்தான் மணிகண்டன்;
அரசிளங்குமரன்
ஆண் புலி மீது
அமர்ந்து வருவதைப் பார்த்த
அவ்வூர் மக்கள் பயந்து வியந்து
அங்கும்,இங்கும் ஓடினர்;


புலி மீது அமர்ந்து தன்
புதல்வன் வருவதைப்
பார்த்த மன்னன்
புரிந்து கொண்டான், தன்
புதல்வன் அந்த சிவனின் அருள்
பெற்றவன் என்று அறிந்துகொண்டான்;

'சூது செய்தவர்களை
உணர்ந்து கொண்டேன்;
அய்யன் என்னை மன்னிக்கவும்;
புலிகளைத் திருப்பி அனுப்பிவிடவும்' என்றே
பணிந்தான்
புரவலன்;


                                                                        ( அருள் தொடரும் )

No comments:

Post a Comment