Friday, October 14, 2011

சுதாமா சரித்திரம் - 1

                                    முன்னுரை - என்னுரை

சுதாமா -

சுத்தமான ஒரு ஆத்மா,
பரந்தாமனோடு கூடப் படித்தவர்,
பள்ளித் தோழர்,
பண்பு நிறைந்தவர்,
பிரம்ம நுணுக்கங்களை அறிந்தவர்; ஆனால்
பரம ஏழை;

வேதம் கற்றவர், வாழும்
விதம் கல்லாது போனார்; காசு
பண்ணத் தெரியாது வாழ்ந்தார்;


உண்ண உணவில்லாது,
பிழைக்க வழி தெரியாது
திண்டாடினார்;
அன்போடு அண்டியவரை
அரவணைத்துக் கரைசேர்க்கும்
அந்தக் கண்ணன்
அவல நிலையிலிருக்கும் தன் நண்பனை
அப்படியிருக்க விட்டுவிடுவானா ?
அவன் பால்
அன்பு செய்யாது போய்விடுவானா ?

கஷ்டத்திலிருக்கும் நண்பன் மேல்
கருணை வைத்தான்,
காப்பாற்றினான்;
கரை ஏற்றினான்;
கண்ணன், அந்தக்
கதை இனி அனுதினமும்;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

No comments:

Post a Comment