Saturday, October 15, 2011

சுதாமா சரித்திரம் - 2

                                    சுதாமா என்ற குசேலர்
சுதாமா -
பணம் பொருள் மேல்
பற்றிலாதவர்;
மனதை அடக்கி
வாழ்பவர்; பணம்
வந்தபோது மகிழார்,
வராதபோது வருந்தார்;

இருப்பதைக் கொண்டு
இல்லறம் செய்வார்;
இதயத்தில் கண்ணனை
இருத்திவைத்து மகிழ்வார்;

அழுக்காடை அணிந்திருப்பார்
அரையில்;
அதைத் துவைத்தால் காயும்வரை
அம்மணமாய் அமர்ந்திருப்பார்
அறையில்;

அணிவது அழுக்காடை என்பதால்
ஆனது அவர் பெயர் 'கு சேலன்*' என்று;
குசேலன் மனைவி குசேலி ஆனாள்;
மண் நிறம் பெரும் நீரானாள்;
அவரோடு ஒன்றி வாழ்ந்தாள்;

தனக்கென ஏதும்
தள்ளிவைத்துக் கொள்ளது
தன் தலைவனுக்கே எல்லாம்
என்றெண்ணி வாழ்ந்தாள்;
தலைவனின் நலம் தவிர வேறேதும்
எண்ணாது வாழ்ந்தாள்;

ஒவ்வொருமுறையும்
சுதாமா தன் துணைவியை அழைப்பார்;
அழைத்த அக்கணத்திலேயே
அவரெதிரில் அவள் வந்து நிற்பாள்;
'ஆர் தெரியுமா உன் ஆளன்,
அந்தப் பரந்தாமனின் பிரியத் தோழன்'
பெருமையாய்ச் சொல்வார்,
பொறுமையாய்க் கேட்பாள்;


நாட்கள் நகர்ந்தது;
பிள்ளைகள் பிறந்தது;
வறுமையும் வளர்ந்தது;
                                                                        ( சரித்திரம் தொடரும் )

___________________________________________________________
*சேலம் என்றால் ஆடை என்று பொருள்

No comments:

Post a Comment