Sunday, October 16, 2011

சுதாமா சரித்திரம் - 3

                                    குசேலாவின் யோசனை

பசியால் வாடியப்
பிள்ளைகளின்
முகம் கண்டு வாடியது
அன்னையின் முகம்;
பொங்கியது துக்கம்;
தோன்றியது ஓர் உபாயம்,
அதற்குத் தேவை கணவனின் சகாயம்;

சுதாமாவிடம் சென்றாள்; ஒரு
சூட்சுமம் சொல்வேன்,
செவிமடிக்க வேண்டுமென்றாள்;
'சொல்' என்றார்,
சொன்னாள்;
'பிரிய பர்த்தா,
பரந்தாமனை ஒருமுறை
பார்த்து வாருங்கள்,
பரந்த
உள்ளம் படைத்தவன், எளியவர்க்கு
உதவும் தயாளன், உங்கள் நண்பன்,
உங்கள் சொல்லுக்கு செவி மடிப்பான்,
உதவி கேட்டால் நாம்
உய்ய வழி சொல்வான்,
உலகுக்கே படி அளப்பவன்
உங்களுக்கு இல்லை என்ற சொல்வானா என்ன ?
உரைத்தாள் பாரியாள்;

அகமுடையாளின் யோசனையை
அவர் ஆமோதித்தாலும்
ஆருயிர் நண்பனிடம்
உதவி கேட்பது
உத்தமம் ஆகாது
என்று எண்ணினார்;
எனினும்
எசொதை மைந்தன் கண்ணனைப்
பார்த்துவிட்டு வர ஒப்புக் கொண்டார்;

அரசன் அவன்,
அவனைக் காணச் செல்கையில்
கையில் என்ன கொண்டு செல்ல ?
எனக் கேட்டார்; உடனே
அவர் மனைவி
அக்கம் பக்க வீடுகளிலிருந்து
அவல் கொஞ்சம் வாங்கி,
அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி,
அவர் கையில் கொடுத்தார்;


பசி ஒரு பக்கம் தள்ள, கண்ணன் மீது
பாசம் ஒரு பக்கம் இழுக்க,
புறப்பட்டார் சுதாமா,
துவாரகை நோக்கி;
கண்ணனோடு தானிருந்த
காலத்தின் நினைவுகளை
மனதில் தேக்கி;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

No comments:

Post a Comment