Wednesday, October 5, 2011

பக்த பிரகலாதன் - 2

                                    இரண்யகசிபு


இரண்யகசிபு -

இராட்சசர்களுக்கெல்லாம்
இராட்சசன்;
அரக்கர்களுக்கெல்லாம்
அரசன்;

அந்தப் பரந்தாமனை எந்நேரமும்
அவதூறாய்
அர்சிப்பவன்;
அவன் பெயரைக் கேட்டாலே
அண்டம் அதிரப் பெரிதாய்க் கர்ச்சிப்பவன்;

விஷ்ணுவை
வெறுப்பவன்;
விடாது
வசை மொழி பல
வழங்குபவன்;

தர்ம காரியம் எங்கு
தலை தூக்கினாலும்
தானே வலியச் சென்று
தடுத்து நிறுத்தி
அதர்மம் செய்பவன்;


அந்த அரி
அல்ல தெய்வம்; தானே
அனைவர்க்கும் தெய்வம் என்று
அறிவித்தான்;
அவ்வாறு அவனைத் துதிக்காதார் தலையை
அரிந்தான்;

பலமுறை தேவர்களைப்
போர் செய்து தோற்கடித்து
புறமுதுகு காட்டி ஓடச் செய்தவன்;
பாவம் செய்வதற்கென்றே
பிறவி எடுத்தவன்;
நல்லவர்களை
நசுக்கினான்;
கெட்டவர்களுக்குக்
கொட்டிக் கொடுத்துக்
குசிபடுத்தினான்;

இவ்வாறு
இரண்யகசிபு
இயற்கைக்கு மாறாக
இயங்குவதற்குக் காரணம் அவன்
இளையவன்
இரண்யாக்சனின் மரணம்,
தம்பியின் மரணம்
தந்த ரணம்;


                                                                        ( பக்தி தொடரும் )

No comments:

Post a Comment