Monday, October 3, 2011

அருள் தரும் அய்யப்பன் - 9

                                    சபரிமலை

'மன்னிக்கும் அளவுக்கு
தவறேதும் நிகழவில்லை;
எல்லாம் தன் விருப்பத்தாலே நிகழ்ந்தது;
எதற்காகப் பிறந்தேனோ
அவ்வேலை முடிய
வேளை வந்தது;
அனைத்தும் நடந்தேறியது;
இனி நான் தேவலோகம்
செல்வேன்' என்றுரைத்தான் மணிகண்டன்;

தாங்கள் எங்களோடு இருந்ததுக்கு நினைவாக
தங்களுக்கு ஒரு கோவில்
தான் கட்ட விரும்புவதை எடுத்துரைத்தான்
தந்தையான அரசன்;
தன்
வில்லிலிருந்து ஒரு அம்பு
விடுத்தான்,
வீர மணிகண்டன்; அவ்வம்பு
விழும் இடத்தில் ஒரு கோவில்


அமைக்கச் சொல்லி
அங்கிருந்து மறைந்தான்;
அந்த அம்பு சபரிமலையில்
போய் விழுந்தது;

மணிகண்டன் கட்டளைப்படியும்,
அகத்திய முனியின்
ஆலோசனைப்படியும்,
அரசன் பதினெட்டு படியோடு ஒரு
ஆலயம் அமைத்தான்;
ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான
அன்பர்கள்,
பூஜை சாமான்கள் ஒரு முடியும்,
பாதையில் தாம் சாப்பிடப்
பலகாரங்கள் ஒரு முடியும்,
ஆக இருமுடியோடு
அய்யப்பன் நாமம் சொல்லி பம்பை
ஆற்றில் நீராடி,
ஐயனை வழிபட்டு வருகின்றனர்;


ஆண்டு தோறும் மகர சங்கராந்தி
அன்று, அந்த அய்யன் ஜோதி வடிவில்
அன்பர்களுக்கு காட்சி
அளித்து
அருள் செய்கிறான்;

அய்யப்பன் அருள் நாமும் பெற்று
அநுதினமும் நலமுடன் வாழ்வோம்;


          ஹரி சிவன் மைந்தனே,
          பம்பையில் பிறந்தவனே,
          பந்தளத்து ராஜனே,
          குருகுலத்தில் வளர்ந்து,
          குருவின் துயர் துடைத்தவனே,
          அரக்கர்களை அழித்தவனே,
          புலியின் பால் கொணர்ந்தவனே,
          தாயின் துயர் தீர்த்தவனே,
          சபரிமலை சாஸ்தாவே,
          சரணம் ஐயப்பா
          சரணம் உன் பாதம்.


                                                                        ( முற்றும் )

No comments:

Post a Comment