Sunday, February 2, 2020

கம்பராமாயணம் 25



நகர் நீங்கு படலம்

1625.
வரி வில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு
உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்
திருவின் நீங்கித் தவம் செயும் நாள் உடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே!

(என்னையும் உன்னோடு அழைத்துச் செல்,
என்று சொன்ன கோசாலையிடம்)

அழகான வில்லுடைய என் தம்பி இம்மண்ணிற்கு அரசனாக,
அவனுக்கு இந்த நிலம் ஆளும் திறம் வந்த பின்பு,
அரசன் தசரதன் அரசபோகத்தை மறந்து
அடவி சென்று தவம் செய்யும் காலத்தில்
அவனோடு சென்று செயற்கரிய காரியங்களை
அப்பொழுது செய்வாய்' என்றான் இராமன்.


1654.
இன்னே பலவும் பகர்வான் 
    இரங்காதாளை  நோக்கி 
 'சொன்னேன் இன்றே; இவள் என் 
     தாரம் அல்லள்; துறந்தேன்;
மன்னே ஆவான் வரும் அப் 
     பரதன் தனையும் மகன் என்று 
உன்னேன்; முனிவா! அவனும் 
   ஆகான் உரிமைக்கு' என்றான்.

இன்னும் பலவாறு தசரதனும், வசிட்டனும் 
அறிவுரை கூறியும் மனமிலகாத கைகேயியை நோக்கி 
'இதோ இன்று சொல்கிறேன்,
இவள் இனி என் மனைவி இல்லை, இப்பொழுதே 
இவளை என் மனதிலிருந்து அகற்றி விட்டேன்.
மன்னனாகப் போகும் இவள் மகனை  
இனி என் மகன் என்று கருத மாட்டேன்.
எனக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களுக்கு 
அவன் உரிமையற்றவன்' என்றான் தசரதன்.


1690.
'கண்ணுள் மணிபோல் மகவை 
    இழந்தும் உயிர் காதலியா 
 உண்ண எண்ணி இருந்தால் 
    உலகோர் என் என்று உரையார்?
விண்ணின்தலை சேருதும் யாம் ;
   எம்போல், விடலை பிரிய  
 பண்ணும் பரி மா உடையாய்  
    அடைவாய், படர் வான்' என்னா.

(தசரதன் அன்று பெற்ற சாப வரலாற்றை 
கோசாலைக்கு உரைத்தான்)
கண்ணின் மணி போன்ற மகனை இழந்த பின்னும் 
உயிர் மேல் ஆசை கொண்டு உண்டு கிடந்தால் 
உலகம் என்ன உரைக்கும்?
நாங்களும் இப்போதே இறக்கிறோம்
அழகான குதிரையுடைய மன்னா,
எங்களைப்போல் நீயும், மகன் பிரிய,
வருந்தி வானுலகை வந்து அடைவாயாக'
என்று முன்னம் நிகழ்ந்ததைச் சொன்னான்.

1703.
ஆவும் அழுத, அதன் கன்று  
   அழுத; அன்று அலர்ந்த 
பூவும் அழுத; புனல் புள்
    அழுத; கள் ஒழுகும் 
காவும் அழுத; களிறு அழுத;
    கால் வயப் போர் 
மாவும் அழுத; - அம் 
    மன்னவனை மானவே.

பசுக்கள் அழுதன 
அப் பசுக்களின் கன்றுகள் அழுதன;
அன்று மலர்ந்த பூக்கள் அழுதன;
நீர் வாழ் பறவை இனங்கள் அழுதன;
தேன் சிந்தும் மலர்ச் சோலைகள் அழுதன;
யானைகள் அழுதன;
காற்றை ஒத்த வலிய குதிரைகள் அழுதன;
மகனைப் பிரிந்து அழும் மன்னன் போலவே;



1718.
சிங்கக் குருளைக்கு இடு தீம்
   சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை
   ஊட்ட விரும்பினாளே!
நங்கைக்கு அறிவின் திறம்
   நன்று, இது! நன்று இது!' என்னா
கங்கைக்கு இறைவன்
   கடகக் கை புடைத்து நக்கான்.

சிங்கக் குட்டிக்கு தரப்படும்
சுவையான மாமிச உணவை
கொடிய கண்ணுடைய நாய்
தன் சிறு குட்டிக்குத் தர எண்ணுதோ?
கைகேயி யின் புத்தி திறம் மிக நன்று
எனச்சொல்லி, இலக்குவன்
கடகம் அணிந்தக் கையைத் தட்டிச் சிரித்தான்.


( தொடரும் )


No comments:

Post a Comment