Friday, January 10, 2020

கம்பராமாயணம் 6


அரசியற் படலம்

171.  தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்
         சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
         நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும், நுணங்கு கேள்வி
         ஆயப் புகுங்கால், அறிவு ஒக்கும் - எவர்க்கும், அன்னான்.

மன்னர்க்கெல்லாம் மன்னனான தசரதன்
   - அன்பு செலுத்துவதில் அன்னை போன்றவன்
   - நன்மை செய்வதையே தன் தவப்பயன் என்று  கருதுபவன்
   - இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்வதால் மகன் போன்றவன்
   - நோய் வந்தால், அதைப் போக்கும் மருந்தாவான்
   - நுணுக்கமாய் ஆராய்ந்து பொருள் காணும் அறிவைக் கொண்டவன்

திரு அவதாரப் படலம்

180.  ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர் 
         தூய மா முனிவனைத் தொழுது, தொல் குலத் 
         தாயாரும் தந்தையும் தவமும் அன்பினால் 
         மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ.


தசரதன் ஒருநாள், பிரம்மனுக்கு நிகரான 
தூய முனிவன் வசிட்டனை வணங்கி, எம் குலத்தின் 
தாய் தந்தை தவப்பயன் 
கருணை பொழியும் கடவுள் 
எனக்கெல்லாமே தாங்கள் தான் என்றியம்பினான்.


182.   அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
          உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;
          பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம் 
          மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.

வசிட்ட, 
அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டேன்,
பகைவர்களை ஒடுக்கிப் பணி புரிந்தேன்,
குறை ஏதும் இல்லாது நாட்டு மக்களைக் காத்தேன்,
என் ஆட்சிக்குப் பின், ஏதும் குழப்பம் நேரும் 
என்று மட்டும் கலக்கம் கொண்டேன்;


200.   மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் 
          நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
          கச ரத துரக மாக் கடல்கொள் காவலன் 
          தசரதன், மதலையாய் வருதும் தாரணி.

கானல் நீர் போன்றவர்களாகிய அரக்கர்கள் வாழ்வை 
எம் குறி தவறா அம்பினால் அழிப்பதற்கென்று 
யாமே, யானை குதிரை தேர், கடல் போன்ற படைகளுக்கு 
தலைவனான தசரதனின் தனயனாய் அவதரிப்போம் 
(என்று முன்னம் திருமால் இயம்பியது 
வசிட்டருக்கு நினைவுக்கு வந்தது)


( தொடரும் )

No comments:

Post a Comment